ஜூலிஸ் பூசிக்கின் – தூக்குமேடைக் குறிப்பு

பாசிச – நாசிச இனவெறியாளன் ஹிட்லரினால், பேர்லின்- பான்கிராட்டஸ் சிறையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட நாள் இன்று – 08.09.1943. சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு ,கொலைக் குழிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர்களையும், புதல்விகளையும், கணவர்களையும், குழந்தைகளையும், தாய் – தந்தையர்களையும் இழந்த – அவர்களைத் தேடி அழைந்த, ஆயிரக்கணக்கான எம்மைப்போன்றே அன்று, பாசிச ஜேர்மனிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தன் துணைவனை தேடி அலைந்த அகுஸ்தினா பூசிக்கு கிடைத்தது, ஜூலிஸ் பூசிக் எழுதிய இக் குறிப்புக்கள் மாத்திரமே. என் விடுதலைப் போராட்ட காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பலலரும் வாசித்த ‘தூக்குமேடைக் குறிப்பும்”, ‘வால்காவிலிருந்து கங்கைவரை’, ‘தாய்’ ஆகிய இவ் மூன்றுமே கூடுதலாக இடம்பெற்றிருந்தன.