‘நமக்கு முதலிடம்; மற்றயைவர்களுக்கு இரண்டாமிடம்’

இது தொடர்பாக, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில், இன்று (07) பதிவிட்டுள்ள அவர்,“நட்பு என்பது பதிலடி குறித்த‌து அல்ல. இந்தியா, அனைத்து நாடுகளுக்கும் அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் உதவ வேண்டும். ஆனால் உயிர்காக்கும் மருந்துகள், முதலில் இந்தியர்களுக்குப் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். இந்தியர்களின் தேவையைத் தாண்டித்தான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், பரசிற்றமோல், ஹைட்ரோகுளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்திருந்தது.

இதனால் அமெரிக்காவால், கொவிட்-19 தடுப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை, இந்தியாவிடம் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவால் ஏற்கெனவே கோரப்பட்டிரந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும் கொவிட்-19ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.