‘நியூசிலாந்துத் தாக்குதலுக்னே இலங்கையில் பதிலடி’

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் வெடிகுண்டுத்தாக்குதல், கடந்த மாதம் நியூசிலாந்து, க்ரைஸ்சேர்ச் பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தண, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, 50 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.