பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள், ஜுலை மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் நிர்மாணப் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.