பாலியல் குற்றச்சாட்டு; தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு மறியல்

தர்மபுரம்  பகுதியில் இயங்கிவந்த தனியார் கல்வி நிலையத்தில், தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க வந்த மாணவிகள் சிலருக்கு , பாலியல் தொந்தரவு  மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அதன் உரிமையாளரை,  எதிர்வரும்  30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி பதில் நீதவான் சிவபாலன், நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.