பிடலுக்கு இன்று அனுதாபப் பிரேரணை

கியூபாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோவுக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படும். அனுதாப பிரேரணையை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கொண்டுவருவார். அந்த அனுதாப பிரேரணை, இன்று மாலை 5 மணிமுதல் 7 மணி வரையிலும் இடம்பெறும். இதேவேளை, பிடல் கஸ்ட்ரோவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்ப்பில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.