பிரதமராக ரணில் பதவியேற்றார்

ரணில் விக்கிரமசிங்க புதியப் பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்,ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாக பிரதமாகப் பதவியேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.