பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த இராஜினாமா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பதவியில் இருந்து சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், அவர் இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.