புலிக்கொடி ஜெயானந்தமூர்த்தி சிங்கக் கொடியுடன்…??

2010ம் ஆண்டு இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் களமிறக்கப்பட்டு பிரதமர் பொறுப்புக்கு கனவு கண்ட திருவாளர் ஜெயானந்த மூர்த்தி அவர்கள், சிறிலங்காவில் தரையிறங்கியுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக சனநாயக அணியென்ற பெயரில் ஒன்றை உருவாக்கியிருந்தவர் என்பதோடு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரச்சார பீரங்கியாக செயற்பட்டவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு துரோகிப்பட்டம் கட்டி பரப்புரை செய்து தன்னை தேசியவாதியாக ஜெனீவா மேடையில் முழக்கமிட்டவர். புலிக்கொடியுடன் வெளிநாடுகளை வலம் வந்த ஜெயானந்தமூர்த்தி சிங்கக் கொடி பிடிக்கத் தயாராகி விட்டார் காத்திருங்கள் களத்திற்காக