பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில், பாலியல் துன்புறுத்தல் வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரில், மூவருக்கான விளக்கமறியலை மேலும் 15 நாள்களுக்கு நீடித்து பொள்ளாச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.