மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முடி­யு­மானால் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்துக் காட்­டட்டும். வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை காணாது என்­பது போலவே மஹிந்­தவின் புதிய கட்சி மந்­திரம் அமைந்­துள்­ளது. எனினும், அடுத்த தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானையின் வாலில் கோட்­டாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியே வெற்­றிப்­பெறும் என்று அக் கட்சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார். புதிய கட்சி என்ற பீதியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஏற்­ப­டுத்தி ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு ஜனா­தி­பதி அஞ்­ச­மாட்டார்.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வுப்­ப­டுத்த வேண்­டிய தேவை ஐக்­கிய தேசியக் கட்சி இல்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வுப்­ப­டுத்­து­வதில் சில குழு­வினர் ஈடுப்­பட்­டுள்­ளனர். எனினும் சுதந்­திரக் கட்­சியின் பிள­விற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதே குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. எக்­கா­ரணம் கொண்டும் பிள­வுப்­ப­டுத்தும் நிகழ்ச்சி நிர­ல் எம்­மிடம் இல்லை.

ஆனால் சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாத தினேஷ் குண­வர்­தன, உதய கம்­மன்­பில உள்­ளிட்­டோரே கட்­சியை பிள­வுப்­ப­டுத்­து­வதில் முனைப்­புடன் உள்­ளனர். இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலகி தனிக்­கட்சி ஆரம்­பிக்க போவ­தாக எச்­ச­ரிக்கை விடுத்த வண்­ண­முள்ளார். எதிர்­வரும் 29 ஆம் திகதி கட்சி காரி­யா­ல­ய­மொன்றும் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. இருந்­த­போ­திலும் மஹிந்த ராஜ­பக்ஷ புதிய கட்சி ஆரம்­பிக்க மாட்டார். வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை காணாது என்­பது போலவே மஹிந்­தவின் புதிய கட்சி மந்­தி­ர­மாகும்.

எனவே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்கு மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மீதான அச்­சமே காரணம் என்று கூறு­கின்­றனர். அது முற்­றிலும் தவ­றாகும். புதிய தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தில் அர­சாங்கம் கள­மி­றங்­கி­யுள்­ளது. இதன்­படி புதிய தேர்தல் முறை­மையின் கீழேயே அடுத்த தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­கின்­ற­மைக்கும் மஹிந்­தவின் மீதான அச்­சத்­திற்கும் எந்­த­வித தொடர்பும் கிடை­யாது. இந்­நி­லையில் புதிய கட்­சியை ஆரம்­பிப்போம் என்று சூளு­ரைத்து கொண்­டி­ருக்கும் மஹிந்த ராஜ­பக்ஷ முடி­யு­மாயின் தனிக் கட்­சி­யொன்றை ஆரம்­பித்து காட்­ட­வேண்டும்.

அதன்­பின்பு தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்பில் அவ­தானம் செலுத்த முடியும். எவ்­வா­றா­யினும் தற்­போது தேர்தல் நடத்­தப்­பட்­டாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெற்­றியை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது. கிராம மட்­டத்தில் எமது கட்­சியின் பலம் ஒங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் அடுத்த தேர்தலில் அன்னம் சின்னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானை வாலில் கோட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிப்பெறும். இதேவேளை புதிய கட்சி என்ற பீதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்படுத்தி ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன