மத்தல விமான நிலையத்தில் விமானம்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல்.504 என்ற பயணிகள் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. மோசமான காலநிலையை அடுத்தே இந்த விமானம் அங்கு தரையிறங்கியுள்ளது. லண்டனிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துகொண்டிருந்த போதே அந்த விமானம் மத்தலயில் இறங்கியுள்ளது. மத்தல விமான நிலையத்தின் களஞ்சிய அறைகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.