மனித உரிமை அறிக்கையை ஆராய்கிறது ஶ்ரீ.ல.சு.க

கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீ.ல.சு.கவின் செயலாளரும் கைத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வாரம் அளவில் இவ்விடயம் தொடர்பிலான அறிக்கையை அக்குழு வெளியிடும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.