மாட்டுத் தொழுவம்

 

இத் தொழுவமானது கால்நடைகளை விஷேடமாக மாடுகளை மழை வெயில் போன்ற காலநிலைகளிருந்து பாதுகாப்பதற்காகவும் அவற்றிற்கான உணவுகளை வீணாக்காமல் பாவிப்பதற்குமாக எமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட குடிலாகும். பனை ஓலையால் வேயப்பட்டு பனம் மட்டைகளால் அடித்தட்டு வடிவமைக்கப்பட்டும் உள்ளது. தற்போதைய சந்ததியினரில் பலருக்கு இது தெரியாமலும் உள்ளது. நவீன காலத்திற்கேற்ப சீற், தகரக் கொட்டகைகள் போடப்பட்டாலும் கால்நடைகளுக்கு சுவாத்தியமான இக்குடில்களே சிறந்ததாக உள்ளது. ஏன் எமக்குக் கூட இவ்வாறான இயற்கைப் பொருள் பாவனையே சிறப்பான வாழ்விற்கு இன்றியமையாததாகும்.

(ஊரெழு பார்த்தீபன்)