யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடத்த தடை

இதற்கமைய,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இன்றைய தினமும் நாளைய தினமும், எந்த நிகழ்வுகளையும் நடத்தகூடாது என, மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் இன்றைய தினம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.

பல்கலை வளாகத்தினுள், இன்றைய தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நாளைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலையே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.