’லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கும்’

யாழ் ஊடக அமையத்தில், இன்று நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தனவெனவும் இந்த போலியான பிரசாரங்களை ஐக்கிய தேசியக் கட்சியே செய்ததாகவும் கூறினார்.

இது தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், அவர் தெரிவித்தார்.