வடக்கு கொள்ளையர்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர், நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளனரென்று, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.