விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைத்தல் அல்லது மீள எழுச்சிபெறுதல் தொடர்பான சாத்தியங்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் கூறியுள்ளதாக, பிரபல ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.