வெளிநாடுகளில் இருந்து திருப்பியனுப்பட்ட 24 பேர்

ஜேர்மனில் இருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்தில் இருந்து 04 பேரும் இவ்வாறு திருப்பியனுப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் அனுப்பி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.