11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி!

விடுதலைபுலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் இணைந்து திரிகோணமலையின் சாம்பூரில் “மறுவாழ்வளிக்கப்பட்ட ஐக்கிய புலிகள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். தமிழர்கள் பெயரில் இயங்கும் பிரதான கட்சிகள் தமிழர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக புதிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்களுக்கு மாற்று சக்தியாக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதில் தற்போது வரை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய 11 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் உதயத்தால் மீண்டும் புலிகள் அமைப்பு உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை அரசு உள்ளதாக தி இந்து ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.