20 பொலிஸாருக்குக் கொரோனா

ரத்தொழுகம, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் 20 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பிரதேசங்களைச் சேர்ந்த 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்தொழுகம பொலிஸில் 15 பொலிஸாருக்கும், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 5 பொலிஸாருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குறித்த இரு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.