29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில்

29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில் தோழர் சிறாப்பின் தலைமையில் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திருமதி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் PLOTE, TELO, EPRLF, EPDP ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். தியாகிகள் தினம்- நாம் கடந்து வந்த பாதையும் சந்தித்த முகங்களும் எனும் தொனிப்பொருளில் புகைப்பட கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.