4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது இராணுவத்தினரால் விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதுடன் 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந் தார்.

நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து முழுமையான இராணுவ மயமாகியிருந்த சூழலில், கொட்டில்களிலும் தரப்பாள் கூடாரங்களிலும் மக்கள் மீள்குடியேறியிருந்த அந்த நேரம் பெண்கள் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள்.

இந்தச் சம்பவத்தில் விசுவமடு வைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலி யல் வல்லுறவுக்குட்படுத்தியதாக வும் மற்றுமொரு பெண்ணாகிய 5 குழந்தை களின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன் றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனு ஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக் கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணையின் போது நான்காவது எதிரி மன்றில் ஆஜரா கவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று நேற்று புதன் கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

தண்டனை

வழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் ஒரு மணித் தியாலயம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவ ¡ளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய இளம் பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும் இந்தத் தீர்ப்பில் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தயாராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண் டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.

வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டஈடாக 5 இலட்சம் ரூபாவும், பாலியல் துஷ்பிரயோகத் திற்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் நட்டஈடு, செலுத் தத் தவறும் பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொரு வரும் 3 வருட கடூழியச் சிறைத்தண் டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லு றவுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பண மும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வழக்கின் எதிரிகள், நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுற வுக்கு 20 வருடமும், பாலியல் துஷ்பிர யோகத்திற்கு 5 வருடமும் நஷ்டஈடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப் பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமு மாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

இந்த வழக்கின் நீண்ட தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் முக்கியமாக தெரிவித்துள்ளதாவது, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எதிரிகளான 4 இராணுவச் சிப்பாய்களும் இரண்டு தாய்மாரை, கூட்டுப்பாலியல் வல்லுறவுக் கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பது விசாரணை மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

கூட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் தன்மீது குற்றம் புரியப்பட்ட போது இறுதி நேரம் வரையில் அவர் களைத் தடுத்துப் போராடியிருக்கின் றார் என்பதும் விசாரணைகளில் நிரூ பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மற்ற பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை ஒப்புறுதி சாட்சியங் களின் மூலம் நிரூபணமாகியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட வர்களின் சாட்சியம் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மன்று விசேட கவனத்திற்கு எடுத்துள்ளது.