‘7ஆம் திகதிக்கு முன்னர் இடதுசாரி அணியினர் மொட்டுடன் இணைவர்’

எதிர்வரும் மாதம் 7ஆம் திகதியாகும்போது, அனைத்து இடதுசாரி அணிகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.