கொழும்பில் சிறப்பாக நடந்த ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடுகை சிகிச்சை பயிற்சி முகாம்!

இலங்கை வந்து உள்ள உலக பிரசித்தி வாய்ந்த செவி வழி தொடுகை சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர் கடந்த வாரம் கொழும்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தினார். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற இச்சிகிச்சை முகாமில் நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இம்முகாம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதே போல எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் துர்க்கா மணி மண்டபத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகின்றார் ஹீலர் பாஸ்கர். ஆர்வலர்கள் 0773023492 என்கிற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முடியும்.

சென்னையில் காற்று விற்பனை

120 முறை சுவாசிக்கும் ஒட்சிசன் குடுவையின் விலை 975 ரூபா இந்தியாவில் முதல் முறையாக துாய்மையான ஒட்சிசன் எனப்படும் பிராண வாயு குடுவை விற்பனைக்காக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, எழும்பூரில் இனவேட்டிவ் என்ற தனியார் நிறுவனம் ஒட்சிசன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு குடுவையில் 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான 99.6 சதவீதம் துாய்மையான ஒட்சிசன் நிரப்பப்பட்டு உள்ளது. எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை 975 ரூபாயாகும்.

(“சென்னையில் காற்று விற்பனை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை எங்கே செல்கின்றது

(சாகரன்)

PLOTE அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், EPRLF கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பேரவையானது (Tamil People Council – TPC) ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்… – Facebook News(Alex Verma)
கேட்க நல்லா இருக்கு.

(“தமிழ் மக்கள் பேரவை எங்கே செல்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது

 

புலிகள் செய்யும் கொலைகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.
முதலாவது வகை கொலைகள் புலிகளால் உரிமைகோரப்படும். அப்படி புலிகளால் உரிமை கோரப்பட்டு கொலைசெய்யபடுபவர்கள் சமூக விரோதிகள்இதிருடர்கள்இவிபச்சாரிகள் என ஊடகங்களால் சித்தரிக்கப்படுவர்.இவர்களில் பலர் சாதாரணா மனிதர்களாக இருப்பர். இக்கொலைகள் காலப்போக்கில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் ஏனெனில் இவர்கள் சாமானியார்களாக இருப்பார்.இப்படியாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

(“ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது” தொடர்ந்து வாசிக்க…)

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 3

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சரானார். எனினும் சம்பந்தருக்குப் பின்பு விக்னேஸ்வரன் தலைவராகி விடுவாரோ என்ற ஏக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி ஒருவருக்கு ஏற்பட்டுவிட அவர் விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை முடக்குவதில் விடாப்பிடியாக நின்றார்.

(“கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 3” தொடர்ந்து வாசிக்க…)

ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.

(“ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!” தொடர்ந்து வாசிக்க…)

தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிக ளுக்கு தமிழ்மக்கள் பேரவை குந்தகம் விளை விக்குமா னால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.
அதே வேளை பேரவையின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் தடையாக இருக்காது எனவும் மாவை சேனாதிராசா அறிவித் துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு பேரவை ஓர் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் அது குறித்து பரிசீலீக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

(“தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்” தொடர்ந்து வாசிக்க…)

கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி

கல்முனை அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) திங்கட்கிழமை கல்முனை தொகுதி தமிழ் மக்கள் மாபெரும் கண்டன எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். கல்முனை பிரதான வீதியிலுள்ள தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் கண்டனப் பேரணி கல்முனை நகர் ஊடாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை ஆகிய இடங்களுடாகச் செல்லவுள்ளது.

(“கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி” தொடர்ந்து வாசிக்க…)

பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு

யாழ். மாநாட்டில் அரசியல் தீர்வு குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமனம்

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

(“பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)