கிழக்கில் வெள்ள அபாயம்…

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல் இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயபுரம், மாமாங்கம், திஸவீரசிங்கம் சதுக்கம், ஊறணி உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில்
பொத்துவில்,  திருக்கோவில்,  லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

(“கிழக்கில் வெள்ள அபாயம்…” தொடர்ந்து வாசிக்க…)

சி.வி.விக்னேஸ்வரன் கூடா நட்பு – சம்பந்தன்!

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கைகளில் வடமாகாணசபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் சிக்கி இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபேட்சகராகவும், தமிழரசுக் கட்சியின் முதலமைச்சருக்கான வேட்பாளராகவும் போட்டியிட்டவர் விக்கினேஸ்வரன்.

(“சி.வி.விக்னேஸ்வரன் கூடா நட்பு – சம்பந்தன்!” தொடர்ந்து வாசிக்க…)

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !

இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை.

(“கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: உஷார் நிலையில் படை

நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பாதுகாப்புப் படைகள், எச்சரிக்கையுடன் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் மேஜர் ஜயனாத் ஜயவீரவே, இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

(“ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: உஷார் நிலையில் படை” தொடர்ந்து வாசிக்க…)

ஜெர்மனி சோவியத் சோஷலிசப் புரட்சியின் 96 ம் ஆண்டு நிறைவு.

ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து, ஜெர்மனியில் 4 – 15 ஜனவரி 1919 இன்னொரு பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது. பெர்லின், ஹம்பூர்க், மியூனிச் ஆகிய நகரங்களில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் சோவியத் குடியரசுகளை பிரகடனம் செய்தனர். இருப்பினும் அந்தப் புரட்சிகள் ஒரு மாதத்திற்குள் அடக்கப் பட்டன. வலதுசாரி இராணுவ அதிகாரிகளும், சமூக ஜனநாயக கட்சியில் இருந்த துரோகிகளும் எழுச்சியை அடக்குவதற்கு உதவினார்கள். அன்று நடந்த இனப்படுகொலையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் ஆகியோரும் படுகொலை செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள்.

விக்கி அழைப்பு! சிவா மறுப்பு! விசமத்தனமான செய்தி!

தமிழ்மக்கள்பேரவையில்,இணையுமாறு,வடமாகாணமுதலமைச்சர்,விக்னேஸ்வரன்விடுத்தவேண்டுகோளை,முன்னாள்சட்டமாஅதிபரும்சட்டவாக்கநிபுணருமான.சிவாபசுபதிநிராகரித்துள்ளார்.இந்த பேரவையின்அரசியல்மீளமைப்புதொடர்பில்,அமைக்கப்பட்டுள்ளஉபகுழுவுக்கு,தனதுபிரதிநிதியாகசெயற்படும்வகையிலேயே,விக்னேஸ்வரன்சிவாபசுபதிக்குஅழைப்புவிடுத்திருந்தார்.அவுஸ்திரேலியாவில் தற்போதுவசித்துவரும்சிவாபசுபதி,அண்மையில்தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

(“விக்கி அழைப்பு! சிவா மறுப்பு! விசமத்தனமான செய்தி!” தொடர்ந்து வாசிக்க…)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(ஒபர்), நடிகர் விஷால் நிவாரண உதவி

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நடிகர் விஷால் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒபர் தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் நிவாரண பொருட்கள் வழங்கினர். சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலபாடி,கூத்தன்கோயில்,ஜெயம்கொண்டபட்டினம்,சாலியங்தோப்பு,விளாகம் ஆகிய கிராமங்களில் திரைப்பட நடிகர் சங்கம் ஒபர் தொண்டு நிறுவனம் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கினர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் மற்றும் தொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் ஆகிய இருவரும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

(“கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(ஒபர்), நடிகர் விஷால் நிவாரண உதவி” தொடர்ந்து வாசிக்க…)

01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)

கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றாமல், செயல் ஆற்றல் களில் நாட்டங்கள் கொள்வீர்.

2008 ஜனவரியில் நிகழ்ந்த மாற்றம் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் மீண்டும் வழமையான பாணியல் செல்வதற்கான நிலைமைகள் உள்நாட்டில் பல்லின, பல்மத சமூகங்களின் அபிலாசைக ளாலும் மற்றும் சர்வதேச நிலைமைகளாலும் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ மய சூழ்நிலையைத் தளர்த்துவது, அது எடுத்த காணிகளை மீளவும் மக்களிடம் கையளிப்பது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியற் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற் போனோர், படுகொலை செய்யப்பட்டோர்; தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவது அனைத்தும் அவசியம்.
இனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க தீர்வுடன் கூடிய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புடன் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

(“01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)” தொடர்ந்து வாசிக்க…)

மண்ணையும் கடலையும் காற்றையும் மரணிக்கச் செய்து மனிதர்கள் மட்டும் வாழமுடியுமா?

(சுகு-ஸ்ரீதரன்)

2015 உலக- பிரபஞ்ச அளவிலான அதிர்வுகள். sri-t
மேற்கு ஆபிரிக்காவில உயிர் கொல்லி எபோலா,
நேபாளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்கள்.
சென்னை -கடலூரில் பிரளயமான வெள்ளம்.

சமூக இயக்கம் என்னும் போது கிரேக்கத்தை அடுத்து போர்த்துக்கல்லில் ,ஸ்பெயினில் நிகழ்ந்த சாதகமான அரசியல் மாற்றங்கள்.

(“மண்ணையும் கடலையும் காற்றையும் மரணிக்கச் செய்து மனிதர்கள் மட்டும் வாழமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

கொள்கையில் தளராத துணிவுடன் தமிழ்மக்கள் பேரவை பயணிக்க தொடங்கியுள்ளது – சி.வி

அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து தமிழ்மக்களின் நலன்கள், உரிமைகளை வலியுறுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவை தனது பணியை மிகவும் அடக்கமாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்கின்றது என பேரவையின் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்மக்கள் பேரவைக்கு எதிராக சில ஊடகங்கள் வேண்டுமென்றே எதிர்ப்பிரசாரம் செய்கின்ற போதிலும் தமிழ்மக்கள் பேரவையானது தனது கொள்கையில் தளராத துணிவோடு பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்த்தரப்புக்கள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரண்டு தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்துகின்ற தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

(“கொள்கையில் தளராத துணிவுடன் தமிழ்மக்கள் பேரவை பயணிக்க தொடங்கியுள்ளது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)