தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 13)

இந்த போராட்டம் தொடங்கியபோது அச்சுவேலியிலும் சில இளைஞர்கள் தொடங்க ஆவலாக நின்றனர்.அவரகள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.அச்சுவேலி தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவில் வாழும் பிரதேசம்.பொருளாதார வளம் நிறைந்த மக்கள்.ஆனாலும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க துணியவில்லை.ஆனாலும் ஒரு சிலர் சேர்ந்து குழுவாக இயங்கினர்.அதில் எனது உறவினர் அரியண்ணை என்று நாங்கள் அழைக்கும் அரியரத்தினம் சந்தர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 13)” தொடர்ந்து வாசிக்க…)

சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, மேற்படிப்புக்காக இந்தியா சென்று திரும்பியவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக பிபிசி சந்தேசய தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நடராஜனும் கலந்து கொண்டிருந்தார். “தமிழ் மக்கள் ஆபத்தான அரசியல் சூழலில் இருந்த போது தமிழ் மக்களைக் காப்பாற்ற எவ்வாறு இந்தியா தலையிட்டதோ அது போன்றே, இப்போதும் கூட இந்தியா இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(“சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச?

யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஸ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(“கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச?” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரனின் யோசனையை நிராகரித்தார் முதல்வர்!

யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை நியமிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

(“சுமந்திரனின் யோசனையை நிராகரித்தார் முதல்வர்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈரோஸ் ஜனநாயக முன்னணி!?

ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஈரோஸ் அமைப்பின் ஆர்.ராஜேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சி அறிவிப்பு நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

(“ஈரோஸ் ஜனநாயக முன்னணி!?” தொடர்ந்து வாசிக்க…)

செங்கைஆழியான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா யாழ்ப்பாணம் பிரௌன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75ஆகும். புவியியல்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற குணராசா புவியியல் பாடநூல்கள் பலவற்றை எழுதியதுடன் பல தொடர்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என ஆக்க இலக்கியங்களையும் படைத்துள்ளார். வீரகேசரி வெளியீடாக வெளிவந்த வாடைக்காற்று நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அது தவிர சிரித்திரன், வீரகேசரி தினகரன் ஆகியவற்றில் தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி வெளியீடாக 10க்கு மேற்பட்ட இவரின் நாவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளராகவும் இவர் பணியாற்றினார்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய புளொட் விலகவுள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் இணைந்துள்ளமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் புளொட் அமைப்பு அதிலிருந்து விலக முயல்வதாக தெரிகிறது.

(“தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)” தொடர்ந்து வாசிக்க…)

விசமப் பிரச்சாரங்களை தயவு செய்து நிறுத்துக

“ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 : ”
என தலைப்பிட்டு இரா.துரைரத்தினம் எழுதிய பொறுப்பற்ற ஆய்வுக்க் கட்டுரையினை இணையதளங்கள் சில தாமே படிக்காது வெளியிட்டு இருந்தமை கண்டிக்கப்படத்தக்கது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மீது வேண்டுமென்ரே சேறு பூசும் செயல். திரு. இரா.துரைரத்தினம் அவர்கள் நன்கு தகவல்களை அறிந்த பின்பு அலசி ஆராய்ந்திருந்தால் அவரின் அறிவைப் பாராட்டியிருக்க முடியும். அவர் யாரிடம் பரிசு வாங்கினாரோ தெரியவில்லை.

(“விசமப் பிரச்சாரங்களை தயவு செய்து நிறுத்துக” தொடர்ந்து வாசிக்க…)

சமஸ்டி தீர்வுக்கு ராஜீவ் காந்தி உடன்பாட்டை தெரிவிக்கவில்லை – வரதராஜப் பெருமாள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984- 1989ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் சமஸ்டி தீர்வு ஒன்றை இலங்கையிடம் கோருவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துதில் அவர் அக்கறை காட்டவில்லை என்றும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

(“சமஸ்டி தீர்வுக்கு ராஜீவ் காந்தி உடன்பாட்டை தெரிவிக்கவில்லை – வரதராஜப் பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)