டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை!!

சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜராவதற்கு தேவையான செலவுகளை ஏற்பதாக தெரிவித்துள்ளார். சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காணொளி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அதற்கான வசதிகள் இல்லாததால், அந்தக் கருவிகள் அமைக்க தேவையான செலவுகளை ஏற்பதாக டக்ளஸ் தேவானந்தா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

(“டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை!!” தொடர்ந்து வாசிக்க…)

எமில் காந்தனுக்கான பிடியாணை வாபஸ்

தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று வாபஸ் செய்துள்ளது. எமில் காந்தன், சரணடைவதாக வழங்கி உறுதியை அடுத்தே இவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

(“தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமும் சுய நிர்ணைய உரிமை கோரும் போலித்தனமும்!

வட மாகாண அரசு என்ற ஒற்றையாட்சி நிர்வாகக் கூறின் அரசியலை ஒரு புறத்தில் தலைமையேற்று நடத்தும் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு மாற்றத்திற்கான முன் மொழிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முன் மொழிவு அதன் முன்னோட்டத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை தொடர்பாகக் குறிப்பிட்டாலும், அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கான முன் மொழிவில் சுய நிர்ணைய உரிமை குறித்துப் பேசாமல் வெறுமனே ஒற்றையாட்சியின் கீழான சமஷ்டி முறைமையையே முன்வைத்துள்ளது.

(“தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமும் சுய நிர்ணைய உரிமை கோரும் போலித்தனமும்!” தொடர்ந்து வாசிக்க…)

அதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை!

மாகாணசபை உறுப்பினரின் ஒலிவாங்கியை கைப்பற்ற சென்ற மத்திய அமைச்சரின் மேலதிக செயலாளர், அதை தடுக்க வந்தவரை பார்த்து கூ ஆர் யு [ who are you ] எனகேட்க, மற்றவர்கள் அவரைப் பார்த்து அதையே திருப்பி கேட்க, ஆரம்பித்த தள்ளுமுள்ளு, அடிதடி, தண்ணீர்ப் போத்தல் ஏறி எனத் தொடர்ந்து, மாகாண அமைச்சர் உதடு வெடித்து இரத்தம் பெருக, மாகாணசபை உறுப்பினர்கள், மத்திய அமைச்சரின் கட்சி உறுப்பினர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் த.தே.கூ உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தவேளை, முதல்வரை பாதுகாப்பாக அவரது காவலர்கள் அழைத்து சென்றனர். அதன் பின் முதல்வர் அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட தேவையற்ற கருத்தால் பிரச்சனை உருவானது என்றும், அவரால் கூட்டிவரப்பட்ட இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது, என்றும் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டார்.

(“அதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

வேட்டை ஆரம்பம்! புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கினார்! மஹிந்தவை சூழும் அபாய மேகம்!

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். அதற்காக ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்த்து sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation தொடரும். அந்த ராஜ தந்திரங்களைத்தான் அரசு தற்போது கையாள்கிறது! போரை வெற்றி கொண்ட மாயையில் ஒரு தசாப்த காலம் பெரும்பான்மை மக்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவை over the night இல் சிறையில் அடைப்பதென்பது பாரிய எதிர்வினைகளை உண்டாக்க வல்லதென அரசியல் பரப்பில் ஓர் அச்சமுண்டு. கிரீஸ் பூதம் தொடங்கி அழுத்கம வரையிலான நிகழ்வுகளே முஸ்லிம்களுக்குள் மஹிந்த விரோதப்போக்கை வளர்த்துவிட்டது. தமிழர்களுக்கு மஹிந்தவின் மீதான வெறுப்புக்கு வேறு பல அரசியல் காரணங்கள் உண்டு.

(“வேட்டை ஆரம்பம்! புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கினார்! மஹிந்தவை சூழும் அபாய மேகம்!” தொடர்ந்து வாசிக்க…)

‘என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!’ – ‘நீயா நானா’ நமீதா!

 

”சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..!

’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’

(“‘என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!’ – ‘நீயா நானா’ நமீதா!” தொடர்ந்து வாசிக்க…)

தொடரும் மர்ம மரணங்கள் ? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறுகிய காலகட்டத்துள் மூவர் மர்மமான முறையில் உயிர் நீத்துள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இச் சம்பவங்களின் பின்னணிகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 24ம் திகதி கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் 52 வயதுடைய முனியாண்டி குமாரராசா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மறுநாள் 25ம் திகதி, கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் கிணறொன்றில் இருந்து 29 வயதுடைய பொன்னம்பலம் சிவகரன் எனும் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

(“தொடரும் மர்ம மரணங்கள் ? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் !” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வுத்திட்டத்தை முந்திக் கொடுப்பது யார்…?

நாரதர் தீர்வு மாங்கனியைக் கொண்டு வந்து அம்மை அப்பனாம் ரணில், மைத்திரியிடம் கொடுத்து இது தகுதியுள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று கொடுக்க…

சரியான தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வருகின்றவர்களுக்கே ‘தீர்வு மாங்கனி’ என்று அம்மை அப்பன் மொழிந்திட்டனர்.

உடனே சம்பந்தர், ஏறுமயிலின் கரியரில் சுமந்திரனையும் ஏற்றிக் கொண்டு உலகத்தைச் சுத்தி வந்து தீர்வுத் திட்டம் காண இசுக்கோத்துலாந்துக்கு போய் விட்டார்.

ஆனால் விநாயகர் விக்னேஸ்வரனோ, யாழ்ப்பாணம் தான் எனக்கு உலகம், கிழக்கோ, வன்னியோ இல்லை என்று யாழ்ப்பாணத்திற்குள் சுத்தி உடனடியாக தீர்வுத்திட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்.

ஆனால் இப்போது அம்மையப்பனிடம் கொண்டு போய் காட்ட வேண்டுமே!

பிள்ளையார் முறிகண்டி தாண்டுமுன் சம்பந்தர் வந்திறங்கியிடுவாரோ என்று அவசரமாய் சம்பந்தி வீட்டுக்குப் போய் கொண்டிருக்கிறார்;.

இவர்கள் எல்லாம் வருமுன்னால் மாங்கனி அழுகி விடுமோ?
இரண்டு பேருக்குமே பிரிச்சுக் குடுக்கப் போய், கடைசியில் குரங்கு அப்பம் பிட்ட கதை போல ஆகி விடுமோ, என்னவோ?

(RC George)

இதற்கு எல்லாம் முதலில் வரதராஜயப்பெருமாள் கொடுத்துவிட்டாரே. விநாயகமூர்த்தியும் கொடுத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அம்மை அப்பனின் பிள்ளைகள் கொடுத்தால்தான் மாங்கனியா மற்றதெல்லாம் வேறு கனியா…? அல்லது சுற்றி கொடுத்தவற்றைதான் சுத்தலாம் என்று மற்றயவற்றை மறைத்து விட்டாரோ ரணில் .
(Siva Easwaramoorthy)