பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)

பற்குணம் 1972 நடுப்பகுதி வரை குச்சவெளி டி.ஆர்.ஓ வாக இருந்தார்.பின்னர் அன்றைய அரசினால் ஒரு சில பிரதேசங்கள் உதவி அரசாங்க அதிபர் தரத்துக்கு உயர்தப்பட்டன.அதில் தம்பலகாமம் பிரதேசமும் ஒன்று.இந்த பிரதேசத்துக்கு பற்குணம் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.இது மூதூர் தொகுதியில் உள்ள பிரதேசம் ஆகும்.இது இரட்டை அங்கத்தவர் கொண்ட தொகுதியாக இருந்தது.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)” தொடர்ந்து வாசிக்க…)

ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்

தினகரனின் ஆசிரியர் பதவியை ஆளுமையினாலும் ஆற்றலினாலும் அலங்கரித்தவராக பேராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் சிவாசுப்பிரமணியத்தை மாத்திரமே குறிப்பிட்டுக் கூற முடியும். பேராசிரியர் கைலாசபதியைப் போன்று பல்கலைக்கழகத்தில் கற்றுத் தேறி பாண்டித்தியம் பெற்ற கல்விமான் அல்ல சிவாசுப்பிரமணியம். ஆனாலும், ஊடகத்துறையில் மாத்திரமன்றி மும்மொழி ஆளுமை, சர்வதேச விவகார அறிவு, நிர்வாகத்திறன், இலக்கியத்துறை ஆற்றல் பேச்சுவன்மை என்றெல்லாம் சிவாசுப்பிரமணியத்தின் தனித்துவத்திறன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

(“ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்” தொடர்ந்து வாசிக்க…)

கே.பிக்கு எதிரான மனு ஜுலை 25 இல் விசாரணை

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (30) அறிவித்தது. இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், குமரன் பத்மநாதனின் (கே.பி) இயக்க நடவடிக்கைகள் பற்றிய விசாரணை அறிக்கையின்; முன்னேற்றம் பற்றிய அறிக்கையை சட்டமா அதிபர், பெப்ரவரி 3 அன்று நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

‘காணி விவகாரத்தை வெள்ளிக்குள் முடிக்கவும்’ – ஜனாதிபதி

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான காணிகளை இனம்காணும் செயற்பாடுகளை, 03ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தினார். இக்கலந்துரையாடலில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம, முப்படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா

சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு சிரிய அரச எதிர்ப்பு கூட்டணியின் தலைமை பேச்சுவார்த்தயாளர் முஹமது அல்லவுஷ் இராஜினாமா செய்துள்ளார். பேச்சுவார்த்தைகள் அரசியல் உடன்பாடொன்றையோ அல்லது சிரியாவின் முற்றுகைப் பகுதிகளில் தளர்வையோ ஏற்படுத்த தவறிவிட்டதாக உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்தவரான அல்லவுஷ் குறிப்பிட்டுள்ளார்.

(“சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 40)

ஒரு நாள் நடுஇரவில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து அய்யா, அய்யா எனக் கத்தி அழைத்தார்.அம்மாவும் நானும் எழுந்து கண்ணாடி துவாரத்தின் ஊடாகப் பார்த்தோம். துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்டு பயந்து மௌனமாக நின்றோம். பற்குணம் எழுந்து வந்தார்.அம்மா அவரைத் தடுத்தார்.அதற்குப் பற்குணம் “அம்மா, பயப்படவேண்டாம். என்னிடம் கோபம் கொண்டு வருபவன் அய்யா என அழைக்கமாட்டான்.
எனவே பயப்பட வேண்டாம்” என்றார். அப்போது அம்மா, “நான் கதவை திறக்கிறேன். நீ நில்.” என்றார். பற்குணம் சிரித்துக்கொண்டே சரி என்றார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 40)” தொடர்ந்து வாசிக்க…)

சோசலிச கட்சியினர் மூவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட மற்றும் சுஜித் குருவிட்ட உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி, புஞ்சி பொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில், திணைக்களத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட குறித்த மூவரையும் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(“சோசலிச கட்சியினர் மூவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது

தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியமைத்திருக்கின்ற விவகாரம், இலங்கையிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் வெற்றிக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

(“சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” தொடர்ந்து வாசிக்க…)

மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்

கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித்தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடிதமொன்றை அனுப்பி வத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் அனுப்பிவைத்துள்ள கடித்தத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, முப்படைகளுக்கும் தன்னைச் செல்லவிடாமல் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை, அரசியல் ரீதியிலான முடிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு

தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க. பெற்றுள்ளது. தி.மு.க. சட்டசபை தலைவராக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கடிதம் சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஜூன் 3ம் திகதி முறைப்படி வெளியாகிறது.

(“எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)