தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை

பாராளுமன்றத்தில் கண்ணியத்துக்கும், கௌரவத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சபை நடுவில் கைகலப்பில் ஈடுபட்ட பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும (ஐ.தே.க) மற்றும் கம்பஹா மாவட்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒருவாரகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

(“தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்

பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(“ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் நடைபெற்ற மே தினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து தொழிலாளர் உரிமை தினமான மே தின நிகழ்வை நடாத்துவது வழக்கம். இம் முறையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள் இணைந்து சிந்தனை செயற்பாட்டு மையம் என்ற ஐக்கிய அமைப்பின் கீழ் மே தின நிகழ்வை நடாத்தினர். இதில் பழம் பெரும் தமிழ் இடதுசாரிகள். தொழிற் சங்கவாதிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஈபிடிபி, சம உரிமை இயக்கம். ரேலோ, புளொட் அமைப்பினர் கனடா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

(“கனடாவில் நடைபெற்ற மே தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 25 )

பற்குணம் ஊரில் இருந்து திரும்பி வந்த சில நாட்களின் பின்பு இராசதுரை மிகவும் மரியாதை கலந்த வாரத்தைகளுடன் அண்ணன் பற்குணம் என விழித்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இராசதுரை பல தடவைகள் ஓ.எல். எடுத்தே ஒருவாறாக சித்தியடைந்தவர்.இப்போது ஏ.எல் பரீட்சை எழுதியிருந்தார்.அதில் அவர் சித்தியடைவாரா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.பற்குணம் விரிவுரையாளாராக இருந்த காலத்தில் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை திருத்தியவர். எனவே அதன் அடிப்படையிலேயே தன் பரீட்சை இலக்கம் கொடுத்து தனக்கு உதவுமாறு வேண்டி எழுதியிருந்தார்.அதனைத் தொடர்ந்து நடராசாவும் அந்த உதவியை வேண்டி கடிதம் எழுதினார்.இதைவிட ராசதுரையும் ஊரில் பற்குணன்ணை எப்படியும் தன்னை பாஸ் பண்ண வைப்பார் என தன் நண்பரகளிடம் சொல்லித் திரிந்தார்.அவருக்கு அப்போது வயது 24.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 25 )” தொடர்ந்து வாசிக்க…)

நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.

(“நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு” தொடர்ந்து வாசிக்க…)

7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முக்கியமான ஏழு விடயங்களை உப-குழுக்கள் வசம் ஒப்படைக்காது தாமே கையாள்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிப்படுத்தல் குழு தீர்மானித்துள்ளது. அரசின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் வடிவம், தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு நியமங்கள் (கொள்கை) மற்றும் காணி ஆகிய ஏழு விடயங்களையே, வழிப்படுத்தல் குழு தம்வசம் வைத்துக்கொள்ளவுள்ளது.
வழிப்படுத்தல் குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று, நாடாளுமன்ற பணியாற்றொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமும், வழிபடுத்தல் குழுவின் செயலாளருமான நீல் இத்தவெல விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“7 விடயங்களை வைத்துக்கொள்ள வழிப்படுத்தல் குழு தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான ‘குறைநிரப்பு’ தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும் அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.

(“தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம்” தொடர்ந்து வாசிக்க…)

இவ்வாறான மே தினக் கூட்டங்கள் தேவை தானா?

இம்முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி, மஹிந்த என்ற இரு குழுக்களின் மே தினத்துக்கான ஆர்வத்தைப் பார்த்தால், அது முதலாவது சோசலிச நாடான சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஜனாதிபதியும் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வி.ஐ.லெனினுக்கு, மே தினத்தைப் பற்றி இருந்த ஆர்வத்தை விடவும் அதிகமோ என்று எண்ணத் தோன்றியது.

(“இவ்வாறான மே தினக் கூட்டங்கள் தேவை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 24)

எமது ஊர் பாடசாலையில் இருந்து ஒரு அழைப்பிதழ் ஒன்று பற்குணத்துக்கு வந்தது.அங்கு கற்பித்த இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.அவரகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் விழா இது.இதில் பேச்சாளரகளாக பற்குணத்தின் பெயரும் போடப்பட்டு அழைக்கப்பட்டார்.இதில் நடராசா,இராசதுரை ஆகியோரின் பெயர்களும் இருந்தன.பொதுவாக நடராசா எங்கள் சமூகத்தில் தன்னைவிட உயர்ந்தவர்கள் படித்தவர்கள் ஆகியோரை விரும்புவதில்லை.இதில் பற்குணத்தின் பெயரை இணைத்தது ஆச்சரியமானது.பற்குணம் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட பின் சொந்த ஊர் நிகழ்ச்சி அழைப்பு என்பதால் கட்டாயம் போகவேண்டிய சூழ்நிலை.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 24)” தொடர்ந்து வாசிக்க…)

“கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

(““கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”” தொடர்ந்து வாசிக்க…)