தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

மார்க்ச்சிச- லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வடபுல செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளருமான தோழர்.சி.சண்முகநாதன் அவர்களை நினைவுகூரல்

இடம்:- கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
58,தர்மாராம வீதி, கொழும்பு – 06
காலம் :- 08 மே 2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- மாலை 4.30 மணி
தலைமை:
க. இராஜரட்ணம்
உரைகள்:
· நீர்வை பொன்னையன்
· வை.கருணைநாதன்
· இரா. தர்மலிங்கம்
அனைவரும் வருக

ஏற்பாடு:
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு

‘அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராணுவம் இன்றித் தூக்கம் வராவிட்டால் அவர், வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்’ என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03), ஒன்றிணைந்த எதிரணியினால் எழுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்து உரையாற்றிய பின்னர், உரையாற்றும் போதே அமைச்சர் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

(“தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 23 )

நாங்கள் அண்ணனுடன் வந்தபின் நாளாந்தம் சமையலுக்குப் பொருட்கள் வாங்கப் போவோம்.பற்குணமும் நானும் போவோம்.அன்றைய ஆரம்ப நாட்களில் பல பொதுமக்கள் பற்குணத்தை அடையாளம் தெரியாது.அதனால் வெள்ளை சாரம் அணிந்து என்னுடன் வருவார்.காலையில் கடற்கரைக்கு மீன் வாங்கப்போவோம்.அவரகள் பிடித்த மீன்களின் அளவுக்கேற்ப நாங்கள் கொடுக்கும் காசுகளுக்கு மீன் கொடுப்பார்கள்.அதன் மூலம் அவர்கள் வருமானம்,சந்தோசம் துக்கம் எல்லாம் கொடுக்கும் மீனின் அளவைக் கொண்டே பற்குணம் கணித்தார் .அவரகளிடம் பேரம் பேசாமல் வாங்கிவருவோம்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 23 )” தொடர்ந்து வாசிக்க…)

மாற்று வேலைத்திட்டம் உள்ள அமைப்புகளுடன் அணிதிரளாவிடின் மலையக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் – இ.தம்பையா

 

மைத்திரி-ரணில் அரசாங்கமும் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில் உள்ளது. இவ் அரசாங்கமும் வெளிநாட்டுக் கடன்களைத் தொடர்ந்து பெற்று வரும் நிலையில் 2018 ஆகின்ற போது இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களும் இதற்கு முகம் கொடுக்க வேண்டி வரும். இதில் அதிகளவு பாதிப்பு மலையக மக்களுக்கு ஏற்படும். இந்த பாதிப்பில் இருந்து மக்கள் தம்மை பாதுகாக்கவும் புதிய பொருளாதார அரசியல் சமூக மாற்றத்திற்கு மாற்றுக் கொள்கை மற்றும் வேலைத்திட்டமுள்ள அமைப்புகளுடன் அணிதிரண்டு போராட வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை உணர்ந்து மலையக மக்கள் செயற்பட வேண்டும். இவ்வாறு காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் தலைமையுரை ஆற்றிய மக்கள் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா குறிப்பிட்டார். அவ்வுரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

(“மாற்று வேலைத்திட்டம் உள்ள அமைப்புகளுடன் அணிதிரளாவிடின் மலையக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் – இ.தம்பையா” தொடர்ந்து வாசிக்க…)

இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?

ஒரு காலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இருந்தால், நாங்கள் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவியாக தேர்தலை பகிஷ்கரித்தார்கள். அதற்காக, மகிந்த புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக, மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

(“இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?” தொடர்ந்து வாசிக்க…)

ஹெரோயின், கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பிப் பொடிகள் அடங்கிய பக்கெட்டுகள், கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் திங்கட்கிழமை (02) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பிப் பொடிகள் அடங்கிய பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, பாலமுனை -02 கிராமத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

(“ஹெரோயின், கஞ்சா வைத்திருந்த இருவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் கொழும்புக்கு மாற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் (வயது 46), மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்றுத் திங்கட்கிழமை (02) காலை, கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தங்களது வீட்டுக்கு நேற்றுக் காலை 6.30க்கு வந்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவனைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக, அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

(“புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் கொழும்புக்கு மாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

இணைந்த கைகளை வெட்டிய துரோகத்தின் நினைவு!

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின்………..

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.
தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.

(“இணைந்த கைகளை வெட்டிய துரோகத்தின் நினைவு!” தொடர்ந்து வாசிக்க…)

மே தினம் அது உழைப்பாளிகளின் உரிமைகான போராட்ட தினம்

(சாகரன்)

19ம் நூற்றாண்டின் இறுதியில் 8 மணி மட்டும் வேலை கோரிப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிலாளி வர்க்கம் பல உயிர் தியாகங்களின் மத்தியில் ஓரளவிற்கேனும் சில உரிமைகளை அன்று தனதாக்கிக் கொண்டது வரலாறு. முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காவிலேயே இந்தப் போராட்டத்திற்கான பொறி தட்டி வைக்கபப்பட்டது என்பது முதலாளித்துவ தாயகத்தில் மனித உழைப்பு சுரண்டல்கள் அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தூரம் உழைப்பாளிகளை வாழும் நிலையிலேயே கொன்று குவித்துக் கொண்டிருந்தது என்பதற்கான சான்றாக கொள்ளலாம்.
அன்றைய கால கட்டத்தில் அமெரிக்கா கறுப்பின மக்களை அடிமைகளாக கால்களை சங்கிலியால் பிணைத்து வேலை வாங்கிய யுகம். கிரேக்க சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாஜிகளும் ரஷ்யாவின் முடிக்குரிய மன்னன் ஜார் மன்னனின் ஆட்சிகளும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அமெரிக்க அப்போது முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக வளர்ச்சயடைந்து வரும் நிலையில் மட்டும் இருந்து. நிலப் பிரபுவத்தின் வளர்சிக் காலத்தில் ஆண்டான் அடிமை நிலைகளே பெரிதும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்கு பின்பே தொழிலாழிகளின் சுரண்டல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றவோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு இன்றைய நிலமைகள் எற்பட்டிருக்கின்றன.

(“மே தினம் அது உழைப்பாளிகளின் உரிமைகான போராட்ட தினம்” தொடர்ந்து வாசிக்க…)