மக்கள் மீதான அநியாய வற் (VAT) வரித் திணிப்பு

மக்கள் மீதான அநியாய வற் (VAT) வரித் திணிப்பு, தமிழர்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கவில்லை போலும். அதியுயர் பதவிகளில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், இதற்கெதிராக வாய் திறக்காமல் இருப்பது, நிச்சயமாக ஒரு வரலாற்றுத் தவறாக அமையப் போகின்றது. குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின், பொருளாதாரப் பிரச்சனை தொடர்பான அசமந்தப் போக்கு. தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாக விளங்கும் முஸ்லிம், தமிழ் மக்களின் அமைதி நிலை, ஆட்சியாளர்களுக்கு மிகுந்த சாதகமான நிலைமையாக மாறிக்கொண்டு இருக்கின்றது. இனப் பிரச்சனையைக் காரணங் காட்டி, பொருளாதாரப் பிரச்சனை மறைக்கப்படுவது, தொன்று தொட்டு நிகழும் விடயங்களில் ஒன்று. இதனால் ஒருபோதும் அரசியால்வாதிகள் பாதிக்கப்படவுமில்லை, பாதிக்கப்படப் போவதுமில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் சொகுசுகளை அனுபவித்தவர்களாக அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இனியும், தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பான விடயங்களில், மௌனிகளாக இருக்க முடியாது. இந்த மௌனம் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

(Arun Hemachandra)

Restrictions on issuing passports to Sri Lankan Citizens lifted

The Government has today, 1 June 2016, issued a circular ending the restrictions placed in March 2011 on the issuance of passports to Sri Lankan citizens resident abroad who, at different times, were compelled to leave Sri Lanka due to conflict or political reasons.

(“Restrictions on issuing passports to Sri Lankan Citizens lifted” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டாலின் அண்ணைக்கு எம்புரட்சிகர அஞ்சலிகள்!

எம்முடன் இமயம் என நின்றிருந்தவர்.
சமூகமாற்றத்துடன் இணைந்த ஈழவிடுதலைக்கு கைமாறு கருதாது உழைத்த மனிதர்.
உயர்ந்த வசிகரமான அந்த மனிதருக்கு ஸ்ராலின் என்று பெயரிட்டவர் ஈ.வெ.ரா பெரியார்.
ஒரு சட்டதரணியான ஸ்ராலின் அண்ணர் 75 முழுதாகவே சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.
மார்க்சியம்- பெரியாரியம் இரண்டையுமே தனது வழிகாட்டல் கொள்கைககளாக வரிந்த கொண்டவர்.

(“ஸ்டாலின் அண்ணைக்கு எம்புரட்சிகர அஞ்சலிகள்!” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!

நீண்ட நெடிய பதிவாக எழுத முடியாத அளவுக்கு, என் கண்ணீர் கணணியை மறைப்பதால், முன் பதிவாக இந்த தீரா துயரை உடன் பதிவிடுகிறேன். பின்பு சற்று என்னை ஆசுவாசபடுத்தியதும், அண்ணா பற்றிய என் தொடர் தொடரும். நேற்று முன்தினம் ஒரு கட்டுரை எழுதுமுன் கிடைத்த தகவலை உறுதிப்படுத்த, குண்சியை தொடர்பு கொண்டபோதுதான் அறிந்தேன், அண்ணாவின் நிலை சற்று மோசம் என்று. குண்சி தந்த தாஸ் [ பல்லவன்] இலக்கத்துக்கும், விஜய் இலக்கத்துக்கும் [அண்ணாவின் மகன் ] அழைப்பை எடுத்தபோது, தற்போது நிலமை மோசமில்லை என தாஸ் மற்றும் விஜயின் அழைப்பில் வந்த பெண் கூறினார். தானும், குகனும் மாவினும், காரில் சென்று அண்ணனை பார்த்துவிட்டு வந்ததாக தாஸ் கூறினார். தொண்டையில் பூட்டிய குழாய் சிரமமாய் இருப்பதால், காலையில் தான் அதை கழட்ட, வைத்தியசாலை போனதாக விஜயின் அலை பேசியில் வந்த பெண் கூறினார்.

(“எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!” தொடர்ந்து வாசிக்க…)

அஜந்தாவின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.

திரு.அஜந்தா ஞானமுத்து (சக்திசாந்தன்) அவர்களால் எழுதப்பட்ட கவிதை நூல்களின் வெளியீடு மே-29-2016 ஞாயிறுமாலை ரொரன்ரோ கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வினை இங்கு வாழும் நமது தாய்மார்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க திருமதி சுஜி கலிங்கரத்தினம் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்து இசைக்க தமிழன்னைக்கு மரியாதை செலுத்தினர்.

(“அஜந்தாவின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!

1984ம் ஆண்டு தமிழ் பிரதேசம் எங்கும் குறிப்பாக யாழ்ப்பாணம் எங்கும் தொடர்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பித்து கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. இஸ்ரேல் மொசாட்டின் ஆலோசனைப் பிரிவு இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் இயங்கி வந்தது. ஐ.தே. கட்சியின் ஆட்சியில் இல்ரேலின் நலன்காக்கும் பிரிவு என்ற போர்வையில் அமெரிக்க தூதரகத்தில் திறக்கப்பட்டு மொசாட்டின் இராணுவ ஆலோசனைப் பிரிவு செயற்பட்டு வந்தது. இலங்கையில் முஸ்லீம்மக்களின் எதிர்பை மீறி இஸ்ரேல் தூதரகம் திறப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்காக ஜேஆர் அரசு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தது.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!” தொடர்ந்து வாசிக்க…)

ஈழவிடுதலைப் போராட்டத்தின் இந்திய மூலவர் தோழர் ஸ்ராலின் அண்ணா எம்மை விட்டுப் பிரிந்தார்

 

ஈழ மக்களால் ஸ்ராலின் அண்ணா என்ற அறியப்பட்டவரும் கும்பகோணத்தை தனது வதிவிடமாகக் கொண்டவர் எம் மனங்களில் நிறைந்த வண்ணம் எம்மை விட்டுப் பிரிந்தார். தனது சொத்து, சுகம், குடும்பம், உறவுகள் எல்லாவற்றையும் ஈழ விடுதலைக்காக அற்பணித்தவர் தோழர் ஸ்ராலின் அண்ணா. கும்பகோணத்தின் எப்பகுதியிலும் ஸ்ராலின் அண்ணா என்று அறியப்பட்ட ஆர்.பி. ஸ்ராலின் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய உந்து சக்தியாக தன்னை 1970 களின் ஆரம்பகாலத்திருந்து அறியப்பட்டவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வளர்ச்சியிலும், வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றியவர். ஈழவிடுதலை அமைப்புகளில் தோழர் நாபா வுடன் மிக நெருக்கமான தொடர்புகளையும் நம்பிக்கையும் வைத்திருந்தவர் தோழர் நாபாவின் மரணம் தோழர் ஸ்ராலின் அரசியல் செயற்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தாலும் தொடர்ந்தும் ஈழ மக்களின் விடிவிற்காக செயற்பட்ட அர்பணிப்புமிக்கவர். இவரின் மறைவால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்கள் தோழர்களின் துயரங்களில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.