என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.

 

என்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.

அவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.

மார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.

அப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)

வாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.

வாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.

தீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.

அதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும் நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.

நான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.

எனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட சமூகம்.

இலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.

Academics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.

தமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்

பயிரை மேய்ந்த வேலிகள்..(16)

(தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)

மனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(16)” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸைத் தொடர்ந்து நோர்வேயிலும் புர்கினிக்குத் தடை?

பெண்களின் உடலில் முகத்தைத் தவிர ஏனையவற்றை மறைக்கும் நீச்சல் ஆடையான புர்கினியை, நோர்வேயிலும் தடைசெய்ய வேண்டுமென, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கட்சியான முற்போக்குக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பல நகரங்கள், இவ்வகை ஆடைகளை ஏற்கெனவே தடைசெய்துள்ள நிலையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(“பிரான்ஸைத் தொடர்ந்து நோர்வேயிலும் புர்கினிக்குத் தடை?” தொடர்ந்து வாசிக்க…)

நாளை வருகிறது அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், நாளை திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காகவும் சாதாரண துறைமுக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது. குறித்த கப்பலானது, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பலாகும். ரணில் அரசின் அமெரிக்க சார்பு அரசயின் மெதுவான் காய் நகர்தலின் ஒருவடிவமாக இதனை அரசியல் அவதானிகள் பார்க்கின்றனர்

கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்

கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்
காலங்காலமாக ஒரு கட்டுக்கதை மக்களின் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. “கம்யூனிஸ்ட் நாட்டில் மதச் சுதந்திரம் கிடையாது”, என்று இறை நம்பிக்கையுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவது வழமை. இவ்வருடமும் “கியூபாவில் மனிதஉரிமைகள்” பற்றிய அமெரிக்க அறிக்கையில், அங்கே மதச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த அறிக்கை கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

(“கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்” தொடர்ந்து வாசிக்க…)

மலையக அரசியல்

பாலம் திறந்து வைக்கப் போனவர் ஆறுமுகன் ராமன்தான். அங்கு உடன் சென்ற முத்து சிவலிங்கம் “யாரோ” சில பேர் ஏதோ சொன்னார்கள் என்பதில் ஆரம்பித்து 75 வருடங்கள் தம்மை மனிதனாக்கிக் கொண்டதை சொல்லி அழுதார். மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உங்களுக்குச் செய்து கொண்டதை சொல்லுவது ஏன்?

(“மலையக அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 66 )

பற்குணம் வவனியாவுக்கு வருவதை உணவுத்திணைக்களம் உறுதி செய்தது.பற்குணத்தின் இக்கட்டான நிலை தெரிந்தும் பல தமிழர்கள் பற்குணத்தின் வரவை விரும்பவில்லை .அதனால் அவர்கள் சாதி என்ற வகையில் அக்கியப்பட்டு அவரின் வரவை எதிர்த்தனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 66 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(15)

(இறந்த பிள்ளையை பர்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)

தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(15)” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையில் சித்த மருத்துவம்

என் அப்பாவிற்கு வயது காரணம் காலில் ட்ரை ஸ்கின் பிரச்சனை வந்தது, குடும்ப மருத்துவரோ, பிண்டத் தைலம் போல ஆயுர்வேத, சித்தா எண்ணெய்கள் தடவிக்கொள்ளுங்கள், கடையில் விற்கும் மாய்ஸ்ரைச்சர்கள், க்ரீம்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் நவீன மருந்துகளுக்கு மாற்று என்று போனால், அவை படு பயங்கர விலைகளில் விற்கப்படுவது அப்பொழுதுதான் தெரிகிறது.

(“சென்னையில் சித்த மருத்துவம்” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திரு அன்டன் செல்லையா

தோற்றம் : 13 யூன் 1948 — மறைவு : 25 ஓகஸ்ட் 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்டன் செல்லையா அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் மகனும், குலம் வேதநாயகம் தம்பதிகளின் மருமகனும்,

கல்யாணி அவர்களின் கணவரும்,

அஸ்வினி, ஆதித்தி ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், நவம், மற்றும் அமலதாஸ், சார்ல்ஸ், ஜோனாஸ், ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சேவியர், குலேந்திரன் ஆகியோரின் சகோதரரும்,

மனோ சிவநாதன், கௌரி வரதராஜபெருமாள், போல் பிரகலாதன், சரத்மதி சமரக்கொடி, நளினி ரோய், பூங்கோதை அல்போன்ஸ் ஆகியோரின் மைத்துனரும்,

மேனோரா அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
போல் பிரகலாதன்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
கல்யாணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +91988439707
நளினி ரோய்(மைத்துனி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919710434354
போல் பிரகலாதன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944474839