ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006

வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத நாள் ஒன்றிருக்கும் ஆனால் ஒரு சிலருக்குத்தான் இப்படியான மறக்க முடியாத நாள் வரும். என் வாழ்வு திசை மாறிய நாள்.மரண பயம் என்பதை அறிந்த நாள். என் மகள் சுனாமியில் இறந்தபின் மகன் பிறப்பில் மகிழ்ச்சியயை சுவாசிக்க தொடங்கிய நாட்கள். மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்து விட்டு வீட்டில் மகனோடு இரவு சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.வீடு முழுவதும் விருந்தினர்களால் நிறைந்திருந்தது.மூதூரிலிருந்து அகதியாய் வந்த என் உறவினர்கள் நூறுக்கு மேல் தங்கியிருந்தனர்.

(“ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006” தொடர்ந்து வாசிக்க…)

ஊதிக் கெடுத்தல்

(முகம்மது தம்பி மரைக்கார்)

சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

(“ஊதிக் கெடுத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால், யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட “எழுக தமிழ்” பேரணி, அரசாங்கத்துக்கு நெருக்குதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு இருந்தால் அந்த நோக்கம் எந்தளவுக்கு நிறைவேறியது என்பதை, எதிர்காலத்தில் தான் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

(“எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது

 

இலங்கை மார்க்சிய – லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் முக்கிய செயற்பட்டாளரும், ‘தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்து வழிநடாத்தியவருமான தோழர் வி.விசுவானந்ததேவன் மறைந்து இவ்வருடம் (15.10.2016) முப்பது ஆண்டுகளாகின்றன.

(“தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

“வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”

பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986 திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு, முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன்.

(““வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”” தொடர்ந்து வாசிக்க…)

வெனிசுவேலா: கலையும் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கனவுகள் அழகானவை; பல சமயம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி நினைத்ததிலும் அதிகமாகலாம். கனவு தரக்கூடிய மகிழ்ச்சியை நனவு மறுக்கிறது. ஆனால், கண்ட கனவை நனவாக்கிச் சாதித்தவர்களும் இப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் வாழ்கிறார்கள். சாத்தியமற்றதாய்த் தெரிவதைச் சாத்தியமாக்குவதற்கான வித்து கனவிலேயே விதைபட்டு நனவில் அறுவடையாகிறது. கண்ட கனவு கண்முன்னே கரைந்து மெல்ல மெல்லக் கலைவதைக் காண்பது வேதனையானது.

(“வெனிசுவேலா: கலையும் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்

(விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பற்றி கருணாகரன் சுகன் சாகரன் என்ன கூறுகின்றார்கள்)

கருணாகரன்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் பலர் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளைப்பற்றியும் சவால்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதிக் கவனப்படுத்தி வருகிறேன். இவர்களுடைய நிலைமையைப்பற்றி வேறு சிலரும் தொடர்ச்சியாக உரையாடல்களைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

(“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“உரிமை உள்ள இனமாக (முஸ்லிம்கள்) வாழவேண்டும் . இதனை யாராலும் தடுக்க முடியாது.; தமிழரும் முஸ்லிம்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் . ஒரு இனத்தை வீழ்த்தி மற்ற இனம் வாழ்ந்துவிட முடியாது.”

( மறைந்த கல்முனை முன்னாள் மஜீத் எம்.பீ ஆற்றிய உரையிலிருந்து. -25 மாசி மாதம் 1987 )

(“விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

சம உரிமை இயக்கம் நடாத்தும் கலாச்சார விழா

 

சம உரிமை இயக்கம் நடாத்தும். எனினும் நாம் பறப்போம் கலாச்சார விழா, நாளை தொடக்கம் மூன்று நாட்கள் தொடர்ந்து யாழில் நடைபெறவுள்ளது அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.