தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.
(அ.விஜயன்)
இலங்கையில் ஏற்பட்ட உள்ளாநாட்டு பிரச்சினை காரணணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற பலர் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுயில் இடம்பெயர்ந்தவர்களாவர்.

(“தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதம் வளர்க்க நெய் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகள்!!!

ஜெயபாலன். த உடன் இணைந்து சாகரன்

தங்கள் சொந்த அரசியல் லாபத்திற்காக எம் பி ஆசனத்திற்காக தமிழ் தேசியத்தை அழுங்குப் பிடியில் வைத்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் அவர்களைக் காவடி எடுக்கும் ஊடகங்களும் மக்களை பிளவுபடுத்தி இனவாதத்தைத் தூண்டுவதற்கு எப்போதும் நெய்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு அண்மையில் கிடைத்தது பொலிஸார் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட படுகொலைத் துப்பாக்கிப் பிரயோகம்.

(“இனவாதம் வளர்க்க நெய் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

யாழ் சம்பத்தரிசியார் கல்லூரியின் பழைய மாணவரும் சிறந்த உதைபந்தாடட வீரரும், 1977 இல் சுகாதாதாசா விளையாட்டு அரங்கில் அகில இலங்கை ரீதியிலான இறுதி ஆடடத்தில் இரண்டு யாழ்ப்பாணத்து உதைபந்தாட்ட பிரபல்ய கல்லூரிகளான ஹென்றி அரசர் (St Henrys) கல்லூரியும் சம்பத்தரிசியார் கல்லூரியும் மோதிய போது சம்பத்திரிசியார் (St Patrick’s) கல்லூரிக்கு தலைமை தாங்கியவருமான ஐசனோவர் (Eisenhower)நேற்று இந்தியாவில் காலமானார். 80 களின் ஆரம்பத்தில் க்ரீன்பீல்டு (Greenfield F.C) விளையாட்டுக்கழகம் என்னைப்போன்ற இளையோரின் இணைப்பில் ஐசனோவர்(St Patrick’s) அரியராஜா (St Johns)சார்ள்ஸ் Jaffna Central) அமலதாஸ் போன்ற எமக்கு iமுந்திய பிரபல கல்லூரிகளின் சிறந்த விளையாட்டு வீரர்களின் வழிகாடடலில் நான் விளையாடியதை பெருமையாக எண்ணுகிறேன். இதுவே நான் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட குழுவிலும் விளையாடுவதற்கு உதவியாக இருந்தது. ஐசனோவர் ஒரு சிறந்த Full back . அவர் எனது உறவினர் கூட. அவரோடு விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். பின்னாளில் St Rochs விளையாட்டு கழகத்தில் எனக்கு பின்னான இளையோரை இணைத்து சிறந்த அணியாக 80 களின் கடைசி பகுதியில் மிலிட்ட செய்தார். மறக்க முடியாத நல்ல மனிதர். அன்பென்று வந்தால் அரவணைத்து மகிழ்வார். பிரச்சனை என்று வந்தால் தைரியமாய் எதிர்த்து நிற்பார். மிகவும் இரக்க குணம் உடையவர். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.

மரண அறிவித்தல்

(ரெலோ சிவா. அல்லது லிமோ சிவா என பலராலும் அறியப்பட்ட சிவா இன் மனைவியின் தயார் கனடாவில் இயற்கை எய்தியுள்ளார்)

திருமதி புஸ்பரத்தினம் நவரட்ணம்
மலர்வு : 29 யூலை 1932 — உதிர்வு : 24 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரத்தினம் நவரட்ணம் அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மகுலசிங்கம்(குலம்- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பகாந்தன், ரஞ்சினி(கனடா), றஞ்சன்(டென்மார்க்), பாக்கியநாதன்(கிளி- கனடா), ஸ்ரீதரன்(தவம்- கனடா), சுகுமார்(கமல்- கனடா), சுகன்யா(கண்ணா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கொலை: ஒரு புதிய தகவல்-நண்பர்கள் கவனத்திற்கு

(விஜய பாஸ்கரன் உடன் இணைந்து சாகரன்)

கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பான தெரிந்த சில நண்பர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டேன். இலங்கையில் போக்குவரத்து பொலிசாரின் லஞ்சம் காரணமாக ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுத பாணிகளாகவே பணிபுரிவதாக சொன்னார்கள்.ஒரு சிலரிடம் மட்டுமே ஆயுத பாவனைகள் உண்டு.

(“யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கொலை: ஒரு புதிய தகவல்-நண்பர்கள் கவனத்திற்கு” தொடர்ந்து வாசிக்க…)

சுலக்சனை பின் தொடர்ந்த ஆவா குழு!

யாழ் படுகொலை தொடர்பாக ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சில விடயங்கள் குறித்து ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு நாயகம் திருமதி தீபிகா உடுகம தலைமையில் விசேட விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது. சுலக்சனை ‘ ஆவா’ குழுவினர் அவர் இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் தாக்கியதாக அவர் போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இதுவரை அது குறித்து எந்தவொரு விசாரணையையும் போலீசார் செய்யவில்லை.

(“சுலக்சனை பின் தொடர்ந்த ஆவா குழு!” தொடர்ந்து வாசிக்க…)

தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!

இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். “மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்.” என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.

(“தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம். எந்த அமைப்பையும் அந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குவது தகும். ஓர் அமைப்பு செய்வது என்ன? செய்யாமல் விடுவது என்ன? என்பதை அவ்வமைப்பின் ஆணை தீர்மானிப்பது குறைவு. மாறாக அவ்வமைப்பை நடாத்துகின்ற அரசியலும் அவ்வரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்டமைப்புகளும் அது சார் சூழலுமே தீர்மானிக்கின்றன. இதற்கு எந்த அமைப்பும் விலக்கல்ல.

(“சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவை புலிகள் ஏன் ஆதரித்தனர்?

மஹிந்த ராஜபக்ஸவை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருப்பதன் மூலம் ஸ்ரீலங்காவை தோல்வி அடைந்த நாடாக மாற்றி இதன் மூலம் தனிநாட்டை அடைகின்ற உத்தியை புலிகள் கையாண்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இவர் மட்டக்களப்பு ஏறாவூரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

(“மஹிந்தவை புலிகள் ஏன் ஆதரித்தனர்?” தொடர்ந்து வாசிக்க…)

அரிய சந்தர்ப்பம்? தவறவிட்ட ஆனந்தி!

இங்கிலாந்தில் இருந்து கொண்டு எழுத்துமூலம் விடுத்த, முதல்வரின் அறிவுறுத்தல் மீறப்பட்டு நடந்தேறியது, வட மாகாண சபை பிரதி தவிசாளர் தெரிவு. மூன்று வருடங்களா கூடும் சபையின் பிரதி தவிசாளர், அண்மையில் மாரடைப்பால் மரணித்தார். தன்னை அரைநாள் மட்டுமே சபை நடத்த அனுமதித்த கவலை, நீண்ட நாட்களாக அவருக்கு தந்த, நெஞ்சு வலியுடன் தான் அவர் கண்துயின்றிருப்பார். அவருக்கு பரிசுத்த ஆவியின் அருள் கிடைத்தாலும், கடைசிவரை தவிசாளர் கதிரையில், முழுநாள் அமரும் பாக்கியம் கிடைக்கவில்லை.

(“அரிய சந்தர்ப்பம்? தவறவிட்ட ஆனந்தி!” தொடர்ந்து வாசிக்க…)