பழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதர்கள் 35 பேரை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.

(“பழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

“அடோ கொட்டியா கவத ஆவே இ போம்ப மொனவத் கெனாவத’( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தளுவினார்.
“ போம்ப நவே அம்ப கெனாவ” ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) என்று நான் கூறி முடிக்கும் முன்னரே சமயலறையை நோக்கிப்பறந்தார் என் நண்பர். அங்கு பணிபுரியும் பலரும் என்னைக்கண்டவுடன் சுகதுக்கங்களை விசாரித்து வன்னி நிலவரங்களை கேட்டறிந்தனர்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)” தொடர்ந்து வாசிக்க…)

தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..

7௦ களின் ஆரம்பத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கால் பதித்த பல ஆரம்பகால தமிழர் உரிமைப்போராட்ட போராளிகளில் தங்க மகேந்திரன் அண்ணாவும் ஒருவர். அதிகமாக வேஷ்டியே கட்டியிருப்பார். Trouser எப்போவாவது அணிவார். எத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் தங்க மகேந்திரன் அண்ணாவின் குரலும் கம்பீர சிரிப்பொலியும் எல்லோரையும் விஞ்சி நிற்கும். ஆஜானுபாகுவான தோற்றமும் இவருக்கே உரித்தானது. அக்கால இளைஞர்கள் பலரில் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

(“தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி

என் ஆரம்பகால இயக்கத்தோழர்கள் ஒவ்வொருவராக மறைவது பெரும் துன்பத்தை எனக்குத் தருகின்றது..கமிலஸ், பத்மநாபா, புஷ்பராஜா, பிரான்சிஸ் ,சந்திரமோகன் வரிசையில் இப்போது தங்கமகேந்திரன். தமிழ் இளைஞர்பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO ..Tamil Liberation Organisation ]ஆகிய இயக்கங்கங்களில் இவரோடு இணைந்து முழுமூச்சாக இயங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

(“தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தங்க மகேந்திரன் எம்மைவிட்டுப் பிரிந்தார்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இன் நீண்டகால உறுப்பினருமான தோழர் தங்க மகேந்திரன் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். ஆரம்ப காலத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட இவர் தோழர் புஷ்பராஜ, பிரான்சிஸ், புஸ்பராணி, பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ஆகியோருடன் இணைந்து ஆரம்ப கால தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TLO)(இவ் அமைப்பு தற்போதைய் ரெலோ அமைப்பு அல்ல) செயற்பட்டுவந்தார். இதில் முத்துக்குமார் போன்றவர்களும் இணைந்து செயற்பட்டுவந்தனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுவினரான முத்துக்குமாரசாமி .புஷ்பராஜா ,வரதராஜப் பெருமாள், சந்திரமோகன் ஆகியோருடன் தங்கமகேந்திரனும் தலைமைக்குழுவில் இருந்தார் இவ் அமைப்பின் செயற்பாடு மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் செயற்பாட்டில் இருந்தது. இதன் பின்பு ஈழப்புரட்சி அமைப்பிலிருந்து கொள்கை வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வந்து உருவான பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இல் இணைந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.

(“தோழர் தங்க மகேந்திரன் எம்மைவிட்டுப் பிரிந்தார்” தொடர்ந்து வாசிக்க…)

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பொறுப்பேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார். அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

(“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)

திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்க ஆரம்ப தலைமைகளில் ஒருவரான தங்கமகேந்திரன் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் என் நினைவுகள் பின்நோக்கி சென்றது. கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி புனர்வாழ்வு பணிக்கு தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் சார்பாக நிவாரண பொருட்களை பொதி செய்யும் வேலைக்கு எம்மை அழைத்தார் கதிரவேலு தேவானந்தா. அதே வேளை புனர்வாழ்வு வேலையில் ஈடுபட விரும்புபவரை மட்டக்களப்பு அனுப்பும் முயற்சியும் எடுக்கப்பட்டது. அப்போது மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுஸ்தாபன தலைவராக இருந்தவர் தேவாவின் தந்தை. சேதாரங்கள் பற்றி அறிய அவர் மட்டக்களப்பு பயணிக்க முற்பட்ட வேளை அவரது வாகனத்தில் நானும் தொற்றிக்கொண்டேன். இரத்தினபுரி பதுளை செங்கலடி ஊடான பயணம் அது.

(“திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)

அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்

(இளையதம்பி தம்பையா)
(இணை அழைப்பாளர் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்)

(இக்கட்டுரை 2014.60.2014 அன்று ‘தந்தையின் தடங்கள்’ என்ற மகுடத்தின் கீழ் வெளியிடப்பட்ட அமரர் மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் நினைவு மலரில் வெளிவந்ததாகும். இச் சிறிய கட்டுரையானது குறிப்பாக இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் சுயநிர்ணய உரிமையை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுதளிக்கும் போக்குகளை அம்பலப்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதாகும். இன்று இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு மாற்றம் பற்றிய முன்னெடுப்புகளின் போது சுயநிர்ணய உரிமை என்ற சொல் தீண்டதகாததாக மாற்றப்பட்டுள்ளது. பழைய, புதிய பாராளுமன்ற இடதுசார்கள் மட்டுமன்றி தமிழ்த்தேசிய வாதிகளும் பெருந்தேசியவாதத்திற்கு அடிபணிந்து சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலப் பொருத்தம் கருதி இக்கட்டுரையை உங்களுடன் பகிர்கின்றோம்.)
(“அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்

இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக, எதிரணியுடன் சிரிய அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர், நேற்று (27) தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகள் பற்றி தமக்கேதும் தெரியாது எனத் தெரிவித்துள்ள சவூதியினால் ஆதரவளிக்கப்படும் எதிரணிக் குழு, ஆனால், யுத்தநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

(“சிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்” தொடர்ந்து வாசிக்க…)

காஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை

கியூபாவின் புரட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சிலைகளை எழுப்பவும் அவரின் பெயரில் பொது இடங்களைப் பெயரிடவும் தடை விதிக்கும் சட்டமொன்று, அந்நாட்டு கீழவையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் உயிரிழந்த காஸ்ட்ரோவின் விருப்பத்துக்கு அமைவாகவே, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

(“காஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை” தொடர்ந்து வாசிக்க…)