மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை

“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”

(“மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

பிடலுக்கு இன்று அனுதாபப் பிரேரணை

கியூபாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோவுக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படும். அனுதாப பிரேரணையை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கொண்டுவருவார். அந்த அனுதாப பிரேரணை, இன்று மாலை 5 மணிமுதல் 7 மணி வரையிலும் இடம்பெறும். இதேவேளை, பிடல் கஸ்ட்ரோவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்ப்பில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதவி விலகத் தயாரென்கிறார் தென்கொரிய ஜனாதிபதி

சர்ச்சைகளில் சிக்கியுள்ள தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் ஹி, தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய தயார் என்றும், தனது ஜனாதிபதிப் பதவி குறித்து தீர்மானிப்பதற்கான பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விடுவதாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

(“பதவி விலகத் தயாரென்கிறார் தென்கொரிய ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

குணரத்னத்தை நாடு கடத்தமாட்டோம்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.