வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம், 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

(“வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

‘இயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே, அரச படைகளும் குண்டர்களும், அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளன. இரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்றுள்ளனர். அதனால்தான், எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இயற்ற வேண்டி வந்தது’ என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(“‘இயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’” தொடர்ந்து வாசிக்க…)

Nathuram Godse and the RSS Connection – We can forget history only at our own peril

(By Pratik Sinha)

RSS is rallying behind BJP and Modi for the 2014 elections in a big way. There are innumerable reasons to outrightly reject the RSS brand of politics which is a huge threat to the secular fabric of our country and the Constitution of India. But today, lets go back in history and see how central a role RSS played in Nathuram Godse’s life – the man who shot down Gandhiji, the Father of the Nation, in the name of ‘Hindutva’.
Nathuram Godse, RSS and Gandhiji Nathuram Godse, RSS and Gandhiji
RSS has time and again denied Nathuram Godse’s connection with them and disputes that he was a member. However RSS’s claims were completely falsified when Nathuram Godse’s brother Gopal Godse, who was also an accused in the Mahatama Gandhi murder case, spilled the beans in an interview given to Frontline on January 28, 1994.
Q. Were you a part of the RSS?

(“Nathuram Godse and the RSS Connection – We can forget history only at our own peril” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்து என்ன? எங்களை முகாம்களில் அடைப்பார்களா? – முஸ்லிம் அமெரிக்க குடிமகன் கேள்வி

அமெரிக்க அதிபரின் உலகை உலுக்கிய குடிபெயர்வு, அகதிகள் மீதான புதிய நடவடிக்கை உலகம் முழுதும் எதிர்ப்புகளுடன் குழப்பங்களை அதிகரித்துள்ளது. ஆனால் ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும், இந்த புதிய உத்தரவு, ‘அருமையாக வேலை செய்கிறது’ என்று புளகாங்கிதம் அடைந்துள்ளனர். விமான நிலையங்களில் தேங்கியுள்ள முஸ்லிம் மற்றும் பிற பயணிகளின் வழக்கறிஞர்கள் கூறும்போது, “குழப்பம் மேலும் நீடிக்கும் என்றே தெரிகிறது. இது ஒரு தொடக்கம் போல்தான் தெரிகிறது” என்று பயமுறுத்தியுள்ளார்.

(“அடுத்து என்ன? எங்களை முகாம்களில் அடைப்பார்களா? – முஸ்லிம் அமெரிக்க குடிமகன் கேள்வி” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு: 10,000 அகதிகளை பணியமர்த்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் முடிவு

அமெரிக்காவின் புகழ்பெற்ற காப்பி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் குடியுரிமை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒதுங்கியும், மவுனமாகவும் இருக்க முடியாது என்றும் ஹாவர்ட் ஸ்குல்ட்ஸ் கூறியிருக்கிறார்.

(“ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு: 10,000 அகதிகளை பணியமர்த்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் முடிவு” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்து விட்டது வானவில் இதழ் 73

மீண்டும் அப்பாவி மக்கள் போராட்ட முனையில்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 23.01.2017 இல் வவுனியா, பிரதான தபாலகத்திற்கு முன்பாக சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்ட உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த மேடையின் பின்னால், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு”, ‘சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்,” ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்” என்று எழுதப்பட்ட பதாகையொன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது. எனவே இவையே போராட்டக்காரர்களின் கோரிக்கைகளென எடுத்துக் கொள்ளலாம். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு தினங்களின் பின்னர், வவுனியாவிற்கு நேரில் விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் பெரும் எடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(“வெளிவந்து விட்டது வானவில் இதழ் 73” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ் காஜியார் வன்மையாக கண்டித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மக்கள் தொழுகைக்காக திரண்டு காணப்பட்டபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டு 08 பேர் காயப்பட்டு உள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பொலிஸார் நம்புகின்றனர். அத்துடன் இருவரை கைது செய்து உள்ளார்கள். இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க தலமாகவும், புகலிடமாகவும் உள்ள கியூபெக் இஸ்லாமிய கலாசார நிலையம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் அதிர்ச்சியையும், கவலையையும் ஒரே நேரத்தில் தந்து உள்ளது என்று உவைஸ் காஜியார் தெரிவித்து உள்ளார். இது காட்டுமிராண்டிகளின் கோழைத்தனம் என்று கூறி உள்ள இவர் இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’

“வட-கிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த குரல் எழுப்பும் தரப்பினர், முதலில் முஸ்லிம் மக்களுக்கு ஏன் அது முக்கியமானதென்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என காத்தான்குடி முஸ்லிம் போரம் தெரிவித்துள்ளது. வடக்குக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த காத்தான்குடி முஸ்லிம் போரத்தின் பிரதிநிதிகள், யாழ். ஊடக அமையத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்தித்து, நேற்று கலந்துரையாடினார்.

(“‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்

(கருணாகரன்)

தமிழ்க்கவியை முதன்முதலில் சந்தித்தது எப்போதென்று சரியாக நினைவு கொள்ள முடியவில்லை. 1993 அல்லது 1994 ஆக இருக்கலாம். சாம்பவி என்ற பெண் போராளியோடு சந்திக்க வந்திருந்தார். (பின்னாளில் புநகரிப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்தார் சாம்பவி). சட்டென தமிழ்க்கவியைத் திரும்பிப்பார்க்க வைத்தது அவருடைய குரல்தான். சற்றுத் தடிப்பான குரலில் உரத்த தொனியில் பேசிக் கொண்டிருந்தார். என்ன, ஏதும் பிரச்சினையோ என்று கவனத்தைத் திருப்பிக் கூர்ந்து கவனித்தபோது, அப்படி எதுமில்லை. அவருடைய குரலும் கதைக்கும் முறையும் அப்படித்தான் என்று புரிந்தது. பேச்சிலடித்தது கிராமிய மணம். அறிமுகமில்லாத புதிய முகம். ஏறக்குறைய ஐம்பதுகளை நெருங்கிய தோற்றம். குரலைப்போலவே சற்றுத் தடித்த உடல். ஆனால், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் ஆளாகத் தெரிந்தார். அவருடைய பேச்சும் அப்படித்தான். படுவேகமானது. படபடவென்று ஆயிரம் விசயங்களைப் பேசித்தள்ளி விடும் ஒரு மாய இயந்திரத்தைப்போல. இப்போதும் தமிழ்க்கவி அப்படித்தான். ஒரு பேச்சியந்திரம்.

(“தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(“இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)