சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்

(சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்)

கர்ப்பகால கொடுப்பனவுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கர்ப்பிணிப் பெண்கள் நலன் சம்பந்தமான விடயங்ளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக பிரசவ நலக் கட்டளை சட்டம் காணப்படுகிறது. 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் திருத்தங்களுக்குட்பட்ட இச்சட்டம், சர்வதேச தராதரத்துடன் ஒப்பிடும் போது இன்னும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய தேவை இப்பொழுது காணப்படுகிறது.

(“சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்…….(அத்தியாயம் 8)

(அக்கினிஞானஸ்நானம்)
பழையபுலிகள் மனம் திறந்துகதைப்பதுஅரிது.
தங்களின் இயக்கநடவடிக்கைகள் குறித்துவாயேதிறக்கமாட்டார்கள். எமதுநிறுவனத்தில் இரண்டுவருடங்களாகப் பணிபுரியும் முன்னாள் ‘பளைப்பொறுப்பாளரும்,மல்லாவிப் பொறுப்பாளரும்’ இதற்குவிதிவிலக்கல்ல. நான் சிலசமயங்களில்,அவர்கள் பங்குபற்றியதாக்குதல்கள்,மறக்கமுடியாததாக்குதல்கள,; மற்றும் ஏன் அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறினார்கள் என்றுபவ்வியமாகக் கேட்பேன். ‘பெரிசாய் சொல்வதற்க்குஒன்றும் இல்லை தம்பி இயக்கத்திலசேர்ந்திட்டன். அம்மா தனிச்சுப்போனா.குடும்பத்தைப் பார்க்கஒருதரும் இல்லை…’போன்றசாட்டுக்களைக் பட்டும்பாடாமலும் கூறுவார்கள். நானும் ஒன்றையும் விடுத்துவிடுத்துக்கேட்கமாட்டேன். அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறுகையில் இயக்கநடவடிக்கைகளைப்பற்றிவெளியில் வாய் திறக்கக்கூடாது என்ற கடும் நிபந்தனை அவர்களுக்குவிதிக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாதல்ல.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்…….(அத்தியாயம் 8)” தொடர்ந்து வாசிக்க…)

உறவுகளின் கதறல்! சம்மந்த(ர்)பட்டோரின் அசமந்தம்?

உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடன் அரசுகளின் முதல் நடவடிக்கை, கைது செய்தல் பின் தடுத்து வைத்தல், அதன் பின் தெருவோர பிணங்கள் ஆக்கல், முடிவாக காணாமல் போகச்செய்தல் எனத் தொடர்ந்த வரலாற்றில், தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர் நிலைதான் மிகவும் கொடுமையானது. உடலங்களை காணாதவரையில் அவர்கள் எங்காவது உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவர்.

(“உறவுகளின் கதறல்! சம்மந்த(ர்)பட்டோரின் அசமந்தம்?” தொடர்ந்து வாசிக்க…)

கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது.

(“கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

(by A Marx)

(ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை சென்னை, ஜன 25,2017)

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொதுவெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர். எந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி தன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.
அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருக வதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

(“ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிகட்டு் போராட்டம் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

தமிழன், தமிழ்தேசியம், பாரம்பரியம் என்றெல்லாம் மிகவும் ஓங்கி ஒலித்தது குரல்கள். ஐ.டி கம்பெனி அம்பி முதல் முக்குலத்து சொந்தம் வரை தமிழ் உணர்வு பீறிட்டு அடித்தது. ஆனால் கடைசியில் காவல்துறையிடம் அடிபட்டு, உடைமைகள் எரிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் மட்டுமே. தமிழன் ஜாலியாக மாட்டின் வாலை கடிக்க தயராகி கொண்டு இருக்கிறான்.

(“ஜல்லிகட்டு் போராட்டம் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?” தொடர்ந்து வாசிக்க…)

அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பாடசாலைகள் வழங்கபட வேண்டும்; அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்களின் கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்

– மக்கள் ஆசிரியர் சங்கம்

அதிபர் சேவை தரம் IIIற்கு ஆட்சேர்க்க நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெற்ற அனைவருக்கும் பாடசாலைகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எனவே, அதனை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்களை அரசாங்கம் அரசியல் நியமனம் என்ற வகையில் அடக்கி அவர்களின் இதுவரை கால பணியை கொச்சைப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்புக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். கஸ்ட பிரதேச பாடசாலைகள் இயங்குவதற்கும், குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களின் உள்ள பாடசாலைகள் யுத்த காலத்திலும் தொடர்ச்சியாக இயங்குவதற்கு காரணமாக அதிபர்களாக பதிற்கடமையாற்றிய ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அத்துடன் அவர்களில் பலர் 10 வருடங்களுக்கு அதிகமான காலம் பதிற்கடமையாற்றியுள்ளனர். எனவே, அவர்களின் சேவையை உணர்ந்து அவர்களுக்கு நியாயத்தை பெற்று கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று மக்கள் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

போட்டி பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்கள் எவ்வித அரசியல் தலையீடுமின்றி அதிபர் சேவையில் இணைக்கப்படல் வேண்டும் என்பதே எமது சங்கத்தின் நிலைப்பாடாகும். அந்த வகையில் அதிபர் சேவை தரம் III பரீட்சையில் சிந்தியடைந்து நியனம் பெற்றவர்களுக்கு அதிபர்களாகவோ, உதவி அல்லது பிரதி அதிபர்களாக இயங்குவதற்கு பாடசாலைகளை வழங்க கல்வி அமைச்சும், மாகாண கல்வி அமைச்சுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மேலும் தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு, அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்களின் சேவையை கருத்திற்கொண்டு அவர்களை அதிபர் சேவையில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கையை கல்வித்துறையை அரசியல்மயமாக்கும் நடவடிக்கையாக நாம் கருதமுடியாது. காரணம் அதிபர்களாக பதிற்கடமையாற்றும் முறைமையை ஆசிரியர்கள் ஏற்படுத்தவில்லை. மாறாக அரசாங்கங்களினதும் அரசியல் தலைவர்களினதும் கல்விமுறையை சீரழிக்கும் கொள்கை நடைமுறைகளினாலேயே இந்நிலையை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்கள் தொடர்பான பிரச்சினையை ஆட்சி செய்த அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை அதிபர்களாக பதிற் கடமையாற்றியவர்களின் பிழை என நோக்கி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க மத்திய அரசாங்கமோ மாகாண அரசாங்கங்களோ நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிபர்களாக பதிற்கடமையாற்றியவர்கள் அரசியல் காரணிகள் எதுவுமின்றி சமூக நலனை அடிப்படையாக கொண்டு தமது சேவையை வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இதற்கு முற்பட்ட காலத்தில் அதிபர்களாக பதிற்கடமையாற்றிய ஆசிரியர்கள் விஷேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அதிபர் சேவைக்கு உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு விஷேட ஏற்பாட்டை பின்பற்றி தற்போது அதிபர்களாக பதிற்கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதேநேரம் இனிவரும் காலங்களில் அதிபர் சேவைக்கு போட்டிப் பரீட்சை மூலம் மாத்திரம் அதிபர்கள் நியமிக்கப்படுவதனை உறுதிப்படுத்தி அரசியல்வாதிகள் கல்வியில் அத்துமீறி தலையிடுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதி நிலைநாட்டப்படுவதென்பது சகல விதமான மனித உரிமை மீறல்களையும் உள்ளடக்கியதே.

பொதுவெளியில் பொதுவாக பேசப்படாதவை
2009 வரையிலான 30 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசிய போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் அளவுக்கு உள்ளிருந்தே கொல்லும் வியாதியால் கொல்லப்பட்டவர்கள் பற்றி பேசப்படவில்லை. யாழ் பல்கலைக் கழக மனித உரிமைக்கான ஆசிரியர் சங்கத்தின் அறிக்கைகளைத் தவிர. இவை அனைத்தும் ஆக்கப்பூர்வமான முறையில் பேசப்படாதவரை எமது சமூகத்தில் போராட்டத்தில் பாரதூரமான தவறுகள் நிகழ்ந்தன என்பது பொதுவெளியில் ஒப்புக்கொள்ளாதவரை அதில் ஒரு நேர்மையற்ற களவாணித்தனம் ஒழிந்திருக்கும் வரை கள்ள மவுனம் காக்கப்படும் வரை இந்த அநீதியான மன நிலை நிலவும் வரை நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நிறைவடையாது. ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த பாரதூரமான உள்ளார்ந்த நிலையை கண்டுகொள்ளாவில்லை. இது உணரப்படாதவரை விமோசனம் இல்லை. அறமற்ற சமூக சாரம்சம் நியாயம் நீதியை நிலை நாட்டமுடியாது. நீதி நிலைநாட்டப்படுவதென்பது சகல விதமான மனித உரிமை மீறல்களையும் உள்ளடக்கியதே. கற்பு நிலை என்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம்.

(Sugu)

ராஜீவ்காந்தி கொலை பிரபாகரனின் தனிப்பட்ட பழிவாங்கல்

அன்ரன் பாலசிங்கம் ராஜதந்திரியும் அல்ல அரசியல் ஆலோசகரும் அல்ல. அவர் வெறும் பேச்சாளர். பூட்டான் பேச்சுவார்த்தையின்போது பாலா அண்ணை நான் சொல்லுறதை சொல்லிறதுக்குதான் நீ இருக்கிறாய் என்று பிரபாகரன் பாலசிங்கத்தை எச்சரித்தார். அங்கே ஏனைய இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இருந்தார்கள். ராஜீவ்காந்தி கொலை பிரபாகரனின் தனிப்பட்ட பழிவாங்கல். பிரபாகரனை ஹெலிகொப்டரில் அழைத்துச் சென்று டெல்லியில் வீட்டுக்காவலில் வைத்தபோதே ராஜீவ்காந்திக்கு பாடம் படிப்பிக்காமல் விடமாட்டேன் என்று பிரபாகரன் அன்ரன் பாலசிங்கத்திடம் கூறினார். தன்னை யாரும் கட்டுப்படுத்தவோ நிர்ப்பந்திக்கவோ முடியாது என்பது பிரபாகரனின் கொள்கை.

(“ராஜீவ்காந்தி கொலை பிரபாகரனின் தனிப்பட்ட பழிவாங்கல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப்போராட்டம் அதன் பிரதான போக்கு முன்னுதாரணமல்ல.

ஈழப்போராட்டம் அதன் பிரதான போக்கு முன்னுதாரணமல்ல. படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம். அதன் இருண்ட பக்கம் ஜனநாயக விரோதமானதாகவும் போராடவந்தவர்களை உள்ளிருந்தே கொல்லும் வியாதியாகவும் உடல்மீதியின்றி அழிப்பதாகவும் காணமல் போக்கடிக்கச் செய்வதாகவும் அமைந்திருந்தது. முற்போக்கு ஜனநாயவாதிகள் மனித உரிமைவாதிகள் பெண்ணுரிமைவாதிகள்கள் ஊடகவியலாளர்கள் சக சமூகங்கள் சக போராளிகள் மக்கள்- தலைவர்கள் எவரும் எதுவும் விதிவிலக்காக இருக்கவில்லை அதன் சாரம்சமான பாசிச இயல்பு எல்லாவற்றையும் ஏப்பம் விட்டது.
ஆரம்பத்தில் ஜனநாயக இடைவெளியை கொஞ்சநஞ்சமேனும் கொண்டிருந்தது பின்னர் எல்லாவற்றையும் சுவடில்லாமல் அழித்தது.
கடைசியில் துன்பியலாக தன்னையும் அழித்தது.
தமிழக மாணவர் இளைஞர்களின் எழுச்சி காந்திய அறங்களில் வேர்கொண்டிருந்தது. வேறுபட்ட அபிப்பிராயங்களுக்காக கண்மூடித்தனமான துரோக முத்திரை, பால் ரீதியான தூற்றுதல்கள், தீண்டாமை போன்றவற்றை அண்டவிடாமல் பார்க்க வேண்டும் .
அவை முளையிலேயே எல்லாவற்றையும் நாசம் செய்துவிடும்.
கருத்து இடைவெளி வேறுபடும் உரிமை உலகத் தமிழ் சூழலில் பாதுகாக்கப்பட வேண்டும்.

(Sugu)