சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து?

ஆளுநர் மும்பைக்கு சென்றதால் சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப் பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்தார். இந்த ராஜினாமா வும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. தற்போது அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரையில், தமிழக முதல்வராக பன்னீர்செல்வமே தொடர்கிறார்.

(“சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து?” தொடர்ந்து வாசிக்க…)

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர் என்றும் முதல்வராக தான் சிறப்பாக பணியாற்றியது சசிகலாவின் குடும்பத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 9 மணியளவில் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தை வலம் வந்து அஞ்சலி செலுத்தியவர் 40 நிமிடங்கள் அங்கேயே தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலிக்கிறோம்….: தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா

இருபதாம் நூற்றாண்டின் பெரிய தமிழ் ஆளுமைகளில் ஒருவரான தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள். இன்று காலை 6.02.2017 ஆறுமணியளவில் காலமானார். தமிழுக்கு அணி செய்த அறிஞர் அவர்கள் 70 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியவர். மதரீதியாக இசுலாமியப் பெருந்தகையாக இருந்தும் தம் மக்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டியவர், கலைக்களஞ்சியப் படைப்பாளர், எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அறிவியல் கலைச்சொற்களை தமிழுக்குத் தந்தவர்.ஐ.நா.வின் கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக உலகத்துத் தொன்மைக் கலைகள் யாவையும் தமிழுக்குக் கொண்டுவந்தவர். போற்றப்பட வேண்டிய அரிய மனிதர். ஆழ்ந்த இரங்கல்கள்.

(“அஞ்சலிக்கிறோம்….: தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா” தொடர்ந்து வாசிக்க…)

ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு

(சேகர் குப்தா)
சுவரில் எழுதிய சித்திரம் போல’ என் றொரு சொலவடை உண்டு. கிராமங் கள், நகரங்கள் வழியாக நீங்கள் பயணம் செல்லும்போது நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்களை நேரிலேயே உணர முடியும். அதைத்தான் ‘சுவரில் எழுதிய சித்திரம்’ என்பார்கள். இந்தியாவில் அதிலும், இந்திய அரசியலில் மாற்றங்களுக்கு என்றுமே குறைவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தின் இதயம், சுவர்களில்தான் என்றாலும் மிகையில்லை.

(“ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு” தொடர்ந்து வாசிக்க…)

நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை

சில மரணங்கள் கொடுமைகள் பொருளாதாரம் சாதி அழகு அந்தஸ்து போன்றவற்றினால் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்களினால் மறக்கப்பட்டு விடும் என்னவோ. நீதி என்பது வக்கிரமானவர்களின் கைகளில் வசமாக மாட்டிக்கொண்டு தவிப்பது மேலும் மேலும் இப்படியான நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

(“நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாண குடாநாட்டில் 17 காவாலிக் குழுக்கள்?

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 காவாலிக் குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(“யாழ்ப்பாண குடாநாட்டில் 17 காவாலிக் குழுக்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து, இந்தச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்களைத் தாம் பெற்றிருப்பதாக, சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

(“எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!” தொடர்ந்து வாசிக்க…)

சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். (“சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆப்பிரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் விளக்கமளித்தனர்.

(“ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’

“சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பது இராணுவத்தினர் இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு, கொலை அச்சுறுத்தல் மற்றும் முன்னாள் போராளிகள் கைது குறித்துக் கேட்ட போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

(“‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’” தொடர்ந்து வாசிக்க…)