அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா

இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

(“அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா” தொடர்ந்து வாசிக்க…)

பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’

“மட்டக்களப்பு மாவட்டத்தில், பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வரும், வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் மயிலம்பாவெளி ஆகிய இடங்களிலுள்ள பொதுமக்களின் காணிகளை, இவ்வருட இறுதிக்குள் விடுவித்துக் கொடுக்கமுடியும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராய்ச்சி தெரிவித்தார்.

(“பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 900 பேர் கைது

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவல்னி உள்ளிட்ட 900 பேர், நேற்று முன்தினம் (26) கைது செய்யப்பட்டனர். மோசடிக்கெதிராக, தடையினை மீறி, ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து சாம்ச்சியமொன்றை, இலாபமற்ற நிறுவனங்களின் நிழல் வலையமைப்பூடாக, பிரதமர் டிமித்திரி மித்வேவ் கட்டுப்படுத்துகிறார் என்ற விவரமான அறிக்கையை இம்மாதம் பிரசுரித்திருந்த நேவல்னி, ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

(“ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 900 பேர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்

தென்சூடான் தலைநகர் ஜுபாவிலிருந்து பிபோர் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த சனிக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலொன்றில், ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள், நேற்று முன்தினம் (26) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், கொல்லப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகளுக்காகப் பணியாற்றினார்களா என்று ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டி -ருக்கவில்லையென்பதுடன், மேலதிக விவரங்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

(“தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்

(கே.சஞ்சயன்)

ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையும் உள்ளது.

(“பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் தமிழீழத்தின் நிலை!

தமிழீழம் குறித்து பேசும் எந்தவொரு தமிழக மேடை பேச்சாள அரசியல்வாதிகளும் திரும்பியே பார்க்காத ஒரு பக்கம்!
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல உண்மைகள் அம்பலம்!
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

(“தமிழகத்தில் தமிழீழத்தின் நிலை!” தொடர்ந்து வாசிக்க…)

விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரிகாவின் தெல்லிப்பழை விஜயம்…

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

 

நம்பிக்கை தரும் மனுஷி சந்திரிகா

(சாகரன்)
மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை தரும் வார்த்தைகளை உதிர்திருக்கின்றார் சந்திரிகா குமாரரணதுங்க பண்டாரநாயக்கா. “…இலங்கையில் உள்ள இரு பெரும் பெரும்பான்மைக்ட கட்சிகள் இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகியும் தமிழர்களின் அரசசியல் பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறிவிட்டனர் மாறி மாறி ஆட்சிக்குவரும் போது ஒருவர் தீர்வுகளை முன்வைக்கும் போது மற்றயவர் எதிர்ப்பதன் மூலம் இது நடைபெற்றது. தற்போது இரு பெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருப்பது தமிருக்கான தீர்வை வழங்க வாய்ப்ப ஏற்பட்டிருக்கின்றது….” என்ற விடயத்தை இது தவறும் பட்சத்தில் காரணம் கூறமுடியாத விடயம் இங்க ஒழித்திருக்கும் என்பதை தனது நம்பிக்கையும் நம்பிக்கையீனத்தையும் இணைத்து குற்றம் சாட்டும் பாணியிலிருந்து தவிர்த்து யதார்தத்தை கூறியுள்ளார்.

(“நம்பிக்கை தரும் மனுஷி சந்திரிகா” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைப் பயணத்தை இரத்துச் செய்தார் ரஜினி

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தாம் அரசியல்வாதியல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், இனிவரும் காலங்களில் இலங்கை வந்து, புனிதப்போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்தால், அரசியல் காரணங்களுக்காகப் போகவிடாமல் செய்து விடாதீர்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.