‘இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு’

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவித்து தங்களை மீளக்குடியமர்த்துமாறு, யாழ். வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயரந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் யாழில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் மேற்படி பணியகத்தின் தலைவியுமான சந்திரிகா, யாழுக்கு இன்று (25) வருகை தந்திருந்தார்.

(“‘இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 75: மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தலைமையும் வழிகாட்டலும் அவசியம்

இலங்கையில் இப்பொழுது எங்கு திரும்பினாலும் ஒரே போராட்டமயமாக இருக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் நாளாந்தம் போராட்டக்களங்களை நோக்கி அணி வகுத்துச் செல்வதைக் காண முடிகிறது. இலங்கையில் மாத்திரமின்றி, உலகம் முழுவதும் 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சி ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் (ஜல்லிக்கட்டு பற்றிய எமது கருத்து
வேறாக இருந்தபோதும்), நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என இரண்டு மிகப் பிரமாண்டமான மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. (மேலும்….)

ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு

வருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.

(“ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூர் விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிப்பு

நாடாளுமன்றத்தில், நேற்றுக் காலை சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுன் பிரகாரம், உள்நாட்டு விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான அனுமதியின் பின்னர், குறிப்பிடப்பட்ட உள்நாட்டு விமானச் சேவையை ஆரம்பிப்பதற்கும் பொல்கஹாவெல- குருநாகல் வரையிலும், அளுத்கமை – காலி பகுதிகளுக்கு, இரட்டை புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கும் 1.05 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று திட்டங்களுக்கும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொது- தனியார் பங்குகளின் அடிப்படையிலேயே, இந்த விமானச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டங்களை, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு கையாளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

36 அகதிகள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது.

(“36 அகதிகள் நாடு திரும்பினர்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும்

உரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்தும் இலக்கோடு 2017ஆம் ஆண்டுக்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும் எதிர்வரும் 2017.04.02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு காவத்தை நகர கூட்டுறவு சங்க பண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அச் சங்கத்தின் வருடாந்த அறிக்கையை சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாவும், வருடாந்த கணக்கறிக்கையை பொருளாளர் என்.தியாகராஜுவும், முன்னேற்ற அறிக்கையை உப தலைவர் எம். புண்ணியசீலனும் வழங்கவுள்ளனர்.

(“மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்

தமிழின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் கடந்த 23-03-2017 அன்று காலமானார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவந்தவர் அசோகமித்திரன். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என விரியும் படைப்புலகம் அவருடையது. 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தன் இறுதி மூச்சுவரையிலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். எண்பது வயதுக்குப் பிறகும் அவரது எழுத்து வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நம் ‘தி இந்து’ நாளிதழிலும் சமீபத்தில் அவர் எழுதிய ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

(“அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘புலிகள் தொடர்பில் தகவல் இல்லை’

“1972 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தம்மிடம் இல்லை” என, அரசாங்கம், நாடாளுமன்றில் நேற்று (23) அறிவித்தது. அத்துடன், அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்த 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

(“‘புலிகள் தொடர்பில் தகவல் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்த கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல்

பிரபாகரனும் புலிகளும் கொலை வெறி பிடித்து, ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய பொதுமக்களைக் கொலை செய்த போதும் எதுவித கண்டனமும் தெரிவிக்காமல், கிறிஸ்தவன் என்ற ரீதியிலேயே ஆதரித்தவர்தான் இந்த கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கும் பாதிரி. நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன்விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கின்றேன்.

(“பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்த கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல்” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகர் யாருடைய கணக்கு ஜெயிக்கும்?

(கே.கே.மகேஷ்)

யானைக் காதில் எறும்பை விடத் துடிக்கிறது திமுக

இன்னொரு இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, இதை மற்றுமோர் தேர்தலாக அல்லாமல், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவின் தொகுதியில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், ‘நாங்களே உண்மையான அதிமுக’ என்று பறைசாற்றிக்கொள்ளும் வாய்ப்பாகவே அதிமுகவுக்கு உரிமை கோரும் மூன்று அணிகளும் கருதுகின்றன.

(“ஆர்.கே.நகர் யாருடைய கணக்கு ஜெயிக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)