ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வாறு மூன்றாம் உலகப் போர் பற்றிய அச்சங்கள் தோன்றி மறைகின்றன. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிகழ்வுகள், நாம் வாழும் உலகு பற்றிய புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

(“ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு” தொடர்ந்து வாசிக்க…)

’60 நாட்களாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் ‘

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள், எங்கள் போராட்டத்தை ஆரம்பித்து 60 நாட்களாக அநாதைகள் போலவே வீதியில் போராடி வருகின்றோம்” என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்றுடன் 60 நாட்களை எட்டியுள்ளது. எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் தொடர்கின்றது.

(“’60 நாட்களாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் ‘” தொடர்ந்து வாசிக்க…)

பறந்து கொண்டிருக்கையில் எரியத் தொடங்கிய விமானம்! கதறியழுத பயணிகள்!

எல்லாப் பரிசோதனைகளின் பின்னர்தான் அந்த விமானம் பறக்கத் தொடங்கியது. பறப்பதற்கு முன்னம் அந்த விமானத்தில் எந்தக் கோளாறுகளும் இருக்கவில்லை. ஆனால், அது வானில் கிளம்பிப் பறக்கவாரம்பித்த இருபது நிமிடங்களில் விமானத்திற்குள் புகை பரவ ஆரம்பித்துள்ளது. என்னவோ, ஏதோ என்று விமானப் பயணிகள் கதிகலங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதுதான் விமானத்தின் எஞ்சின்கள் தீப்பற்றி எரிவதாக அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

(“பறந்து கொண்டிருக்கையில் எரியத் தொடங்கிய விமானம்! கதறியழுத பயணிகள்!” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை! ஒரு தேநீர்க் கிண்ணத்தின் விலையோ….?

(எஸ். ஹமீத்)

கடந்த 100 வருடங்களில் இப்படியொரு ஆடம்பரமானதும் பிரமாண்டதுமான மாளிகை உலகில் எங்கேயேனும் கட்டப்படவில்லையெனக் கூறுகின்றன சர்வதேச ஊடகங்கள். அமெரிக்க அதிபரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையைவிட 30 மடங்கு பெரிய அந்த மாளிகையில் 1100 அறைகள் இருக்கின்றன. அதில் 250 அறைகள் துருக்கிய அதிபர் எர்டோகனின் முழுமையான பாவனைக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

(“வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை! ஒரு தேநீர்க் கிண்ணத்தின் விலையோ….?” தொடர்ந்து வாசிக்க…)

ஈரானின் ஏவுகணை: இஸ்ரேலுக்கு மரணம்!

நேற்றுக் காலை ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது தேசிய இராணுவ தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது. சகல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்களுடன் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. அதில் ஈரானின் முக்கியமான பல ஏவுகணைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாகச் சென்றன. அதிலொரு ஏவுகணையில் ‘இஸ்ரேலுக்கு மரணம்’ என்று பாரசீக மொழியில் எழுதப்பட்ட பதாகை தொங்கிவிடப்பட்டிருந்தது.

(“ஈரானின் ஏவுகணை: இஸ்ரேலுக்கு மரணம்!” தொடர்ந்து வாசிக்க…)

சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்

(கருணாகரன்)

கோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம். கொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை. பகலில் மட்டுமல்ல, இரவிலும் படுத்துறங்கவோ, ஒரு இடத்தில் ஆற அமர இருந்து, ஒரு காரியத்தைச் செய்யவோ முடியாது. வியர்த்துக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. களைத்துச் சோர்ந்து விடுகிறது உடல். மின்விசிறியில் அல்லது ஏஸியில் தஞ்சமடையவேண்டும் போலிருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமானதா?. நீருக்கடியில் போய் மூழ்கிவிடவேண்டும் போலிருக்கும்.

(“சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

தாஜுதீன் கொலை வழக்கில் மகிந்தவின் மனைவி கைது செய்யப்படப் போகிறாரா…?

கொழும்பு நாராஹென்பிட்டி பிரதேசத்தில் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுடீன் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்மமான  முறையில் கொலை செய்யப்பட்டார்.  அந்தக் கொலை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

(“தாஜுதீன் கொலை வழக்கில் மகிந்தவின் மனைவி கைது செய்யப்படப் போகிறாரா…?” தொடர்ந்து வாசிக்க…)

திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்

இன்று காலை பிரித்தானிய நேரம் காலை 10.55 மணிக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென அவசர அவசரமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கும் நிலையில் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு பிரிட்டனில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

(“திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’

“தமிழ் முற்போக்குக் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்துவத்துடன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமான அ. அரவிந்தகுமார் தெரிவித்தார். அதனை முன்னிலைப்படுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(“அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’” தொடர்ந்து வாசிக்க…)

32 சடலங்கள் இதுவரை மீட்பு

கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்துவிழுந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன. எனினும், குப்பை மலைக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.