விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குட் பை போர் எவர்'( GOODBYE FAOREVER)  சொல்கிறது BBC தமிழ் சேவை!

(எஸ். ஹமீத்.)
BBC யின் தமிழ் மொழிச் சேவையான ‘தமிழோசை’ யின் சேவை வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தி தமிழ் நெஞ்சங்களில் மிக்க கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

(“குட் பை போர் எவர்'( GOODBYE FAOREVER)  சொல்கிறது BBC தமிழ் சேவை!” தொடர்ந்து வாசிக்க…)

இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு

இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார். முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு மாத காலம் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விதிமுறை கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் வரை தங்குவதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

(“இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு” தொடர்ந்து வாசிக்க…)

ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை

யாழ் – நெடுந்தீவு பகுதியில் ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற குற்றவாளிக்கே இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

(“ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் கொலை முயற்சி: ஐவருக்கும் மறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று (05) உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

6,176 இலங்கையர் கைது

“சட்ட விரோதமான முறையில், கடல் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள பிரிவினால், கடந்த ஐந்து வருடத்தில் 6,176 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என,

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், கடந்த ஐந்து வருட காலத்துக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமுத்திரப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளை வெகு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

(“6,176 இலங்கையர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார்.

(“கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்” தொடர்ந்து வாசிக்க…)

ரிஷாட் இராஜினாமா?

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

(“ரிஷாட் இராஜினாமா?” தொடர்ந்து வாசிக்க…)

தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??

(சாகரன்)

மாடு திருடியவனுக்கு தண்டனை என்று சும்மா விட்டுவிட்டு போக முடியவில்லை. (கொலை) வெறிபிடித்து தண்டனை வழங்குவதற்குரிய அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார். தண்டனை என்பது ஒருவன் தெளிந்து, திருந்தி, மனிதனாக வாழ்வதற்கே ஒழிய மாறாக அவனை அழித்தொழப்பதற்காக அல்ல. துன்புறுத்தலில் ஈடுபடுவதும் ஒருவகை குற்றம்தான்;. இந்த தவற்றிற்கான தண்டனை ஏற்க யார் முன் வருவார்கள். தவறு செய்வதற்காக சமூகக் காரணிகள் என்ன என்பது ஆராயப்பட்டு இந்த சமூகக் காரணிகள் களையப்பட்டு இதன் அடிப்படையில் அறிவூட்டப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒரு நல்ல பிரஜையாக வாழ வழிவகை செய்யும் அணுகு முறையே தவறுகளை களைவதற்குரிய சரியான செயற்பாடு ஆகும்.

(“தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??” தொடர்ந்து வாசிக்க…)