யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்

புலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் எனக் குறிப்பிடும் சுகன் „முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.’ என்கின்றார்.

(“யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் நாளை 06.05.2017 மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணம், பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தில் வெளியிடப்படுகிறது.
நிகழ்வில் சுகுவின் அரசியல் சிந்தனைகள், செயற்பாடுகள் பற்றியும் அவர் எழுதியிருக்கும் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் பற்றியும் உரையாடல்கள் நடக்கின்றன.
புதிய தலைமுறையுடன் தன்னுடைய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முற்படும் தோழர் சுகுவின் நோக்கும் அணுகுமுறையும் வரவேற்கப்பட வேண்டியது. போதனைகளாக இல்லாமல், பகிர்தலாகவே சுகு எப்போதும் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பவர். இதுவே இந்த நூலிலும் காணப்படுகிறது.

(“தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்” தொடர்ந்து வாசிக்க…)

இவர்கள் போராளிகளா?

1987 ஐப்பசி பத்தாம் நாள் புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதலை தொடங்கினார்கள் .அப்போது நான் சண்டிலிப்பாயில் இருந்தேன்.மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு இந்திய இராணுவ வண்டியில் சில இராணுவத்தினருடன் அவர்கள் காரைநகரை நோக்கிப் போய்க்கொண்டிரைந்தார்கள்.அப்போது நான் எனது உறவினர், ஒருவருடன் வீதியில், நின்று கதைத்துக்,கொண்டிருந்தேன்.
ஒரு சில மணி நேரங்கள் கழித்து நான் சங்கானை சந்தைக்கு மரக்கறி வாங்க போனேன்.அப்போது ஒருவர் வடக்கத்தையாங்களை வெட்டவேண்டும்.விடக்கூடாது என சத்தம் போட்டு கொண்டே வந்தார்.

(“இவர்கள் போராளிகளா?” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்!

வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பினை தனது பதவி முடிவுறும் தறுவாயினில் பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவது எனும் நோக்கத்துடன் வடமாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் உருவாக்கியுள்ளார்.

(“அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை

எனது மண்டை கறள்கட்டிவிட்டதென எவ்வாறு சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் பேசலாமென நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா. அண்மைக்காலமாக உச்சம் பெற்றுவரும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி- ஈ. பி.ஆர்.எல்.எவ். மோதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது. அப்போதே யாழ்.ஊடக அமையத்தினில் மாவையின் மண்டை கறள்கட்டிவிட்டதோவென சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.

(“மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.

(“அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாத இரவொன்றில் தனது நண்பருடன் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கோஷ்டி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, அதன் பின்னர் அவரை மிக மோசமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

(“கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன.

(“மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்” தொடர்ந்து வாசிக்க…)

புத்தக வெளியீட்டு நிகழ்வு

கடந்த 15-20 ஆண்டுகளில் சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக அவ்வப்போது எழுதியவற்றில் ஒரு பகுதி நூலாக வெளிவருகிறது.
வெளியீட்டு நிகழ்வு 06-05-17 மாலை 4.00 மணி. திருமறைக்கலாமன்றம். (யாழ் பிரதானவீதி தண்ணீர் தாங்கி அருகே)

தோழமையுடன்
ஶ்ரீதரன்  -சுகு

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்களை மு. திரு நாவுக்கரசு தமிழ்வின் என்ற செத்தவீட்டு இணையத்தளத்தில் தனது வழமையான ‘ஆய்வு’ கட்டுரையாக பதிவுசெய்துள்ளார். புலிகளுக்கு இறுதிவரையும் வக்காத்து வாங்கி புலிகளும் மக்களும் அழிந்து போய்க்கொண்டிருந்த இறுதிக்காலகட்டத்தில் இந்தியா தப்பிப்போன திரு நா இப்படி ஒரு திருகு தாளம் விடுகிறார். சுட்டவனும் இல்லை சுடச்சொன்னவனும் இல்லை சுடப்பட்டவரும் இல்லை என்பதால் எதையும் எழுதலாம் என்ற மனப்பிறழ்வு கொண்ட மனிதன் தான் இதை செய்யமுடியும்.

(“அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்” தொடர்ந்து வாசிக்க…)