அரசியல் அதிகாரம் அற்ற இனங்களாக தமிழ் பேசும் மக்களை மாற்றும் சதி திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

(சாட்டோ மன்சூர்)
சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பில் சிறுபான்மை இனத்தவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரிமைகளும், பாதுகாப்பும் காலவோட்டத்தில் படிப்படியாகப் பறிமுதல் செய்யப்பட்டும் செயலிழக்கப்பட்டும் வருவதை யாவருமறிவர். இதை மறைமுகமாகவும், நாசூக்காகவும் இங்குள்ள தேசிய அரசியற் கட்சிகளே நன்கு திட்டமிடப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகின்றன. சோல்பரி அரசியல் சாசனப்படி பாராளுமன்றத்திற்கு 95 பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாகவும் அவற்றுள் 42 பிரதிநிதிகள் சிறுபான்மையினரால் தெரிவு செய்யக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

(“அரசியல் அதிகாரம் அற்ற இனங்களாக தமிழ் பேசும் மக்களை மாற்றும் சதி திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்

சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திரபிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல்காந்தியைச் சந்திக்க நேர்ந்தது.
அரசியலை அதிகாரத்தின் பிடியில் இருந்து விடுவித்து, மீண்டும் சேவைக்கான களமாக மாற்ற வேண்டும் என்கிற அவரது தீராத பெருங்கனவின் முதல் முயற்சி அந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்வில் ஒரு சிலரை அவர் சில மணித்துளிகளில் இனம் கண்டு கொண்டார். அதில் நானும் ஒருத்தி. அவரது உள்ளுணர்வு அபாரமானது என்பதை பின்னாளில் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்.
அடுத்த சில மாதங்களில் அவர் இளைஞர் காங்கிரசில் இந்தியா முழுவதும் நேர்மையான, களப்பணியில் விருப்பமுள்ள, மக்களை நேசிக்கின்ற இளைய தலைமுறைத் தலைவர்களை கண்டடைய ஒரு குழுவை நியமித்தார்.

(“இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வர் வினோத செயல்!?.

வடக்கு முதல்வர் மீது தமக்கு நம்பிக்கையும் தமது தொடர் ஆதரவும் இருப்பதாக ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்து அதில் கையொப்பம் இட்டவர்களில் 15வது பெயரும் கையொப்பமும் சாட்சாத் வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுடையதே.

(“வடக்கு முதல்வர் வினோத செயல்!?.” தொடர்ந்து வாசிக்க…)

மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!

கேள்வி:- உங்கள் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன?
பதில்:- எனது தந்தை கே. கே. மரைக்கார். பெயர் எடுத்த முன்னணி வர்த்தகர். இவர் கல்முனை பட்டினசபை தலைவராக விளங்கினார். சுயேச்சையாக தேர்தல் கேட்டு வென்றிருந்தார்.. இவருடைய காலத்தில் கல்முனை பல துறைகளிலும் செழித்து காணப்பட்டது. இவரே எனக்கு முன்னுதாரணம் ஆவார்.

(“மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

இராஜினாமா செய்தார் குருகுலராஜா

வடமாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் இராஜினாமா கடிதத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரினிடம் கையளித்துள்ளார். முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து, இராஜினாமா செய்தார் குருகுலராஜா இன்று மாலை 5.30 மணியளவில், தனது இராஜினாமா கடிதத்தை, அவர் கையளித்துள்ளார். ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு, முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(“இராஜினாமா செய்தார் குருகுலராஜா” தொடர்ந்து வாசிக்க…)

விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“வட மாகாணசபையில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் மீதான மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும், நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புவதுடன், மூன்றாந்தரப்புகளால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

(“விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?

(சாகரன்)

ரொம்பவும் வெட்கப்படவேண்டிய விடயம். இந்த சமரசம் தவறுகளை ஒருவகையில் நியாயப்படுத்தி அதனைத் தொடருங்கள் என்று ஏந்த கூச்சமும் இன்றி அனுமதி வழங்கிய சமரசம். ஒரே வர்த்தைச் க்க சேர்ந்த இரு அணியினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு. மக்கள் நலன்களை முழுமையாக பின்தள்ளி தமது இஷ்டத்திற்கு மக்கள் பணங்களை வளங்களை தவறான வழியில் கையாடல் செய்த குற்றங்களை மக்களே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஏதேச்சாகராமான செயற்பாடு. அறம் இங்கு செய்துவிட்டது இதற்கு வேறு மதத் தலைவர்கள் சமரம் வீசி ஆசீர்வாதம் வழங்கிய செயற்பாடுகள் இதற்கு சமரசம் என்று பெயர் வேறு. தூ கேடு கெட்ட செயற்பாடு.

(“சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?” தொடர்ந்து வாசிக்க…)

‘விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்’

சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்ககைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு நேற்று (19) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

என்னுடைய 17.06.2017ஆம் திகதி கடிதத்துக்கு உங்கள் பதில் கிடைத்தது. நன்றி. இன்றைய தினம் (19) காலை பேராயர் ஜஸ்டின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களாலும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களாலும் (கை​யெழுத்திடப்பட்டு) தரப்பட்ட குறிப்பும் கிடைக்கப்பெற்றேன்.

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு முதலில் விளக்கம் தருகின்றேன்.
குறிப்பிட்ட அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக எந்தவிதத் தண்டனையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம், வாகனங்களைப் பாவிக்கலாம் இத்யாதி. சாட்சிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் முகமாகவே விசாரணைக்குழு விசாரணை நடத்தும் போது இரு அமைச்சர்களும் விடுமுறையில் இருக்க வேண்டும் எனப்பட்டது. அவர்களுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகளும் பெறப்பட்டுள்ளன.

இரு அமைச்சர்கள் பற்றியும் உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாதிருப்பது பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், சுயாதீன சட்ட விசாரணையைத் தடைசெய்யும் விதமாக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்க நீங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

சுயாதீனமான சட்ட விசாரணையை நிலைநாட்டுவதற்கும் அதன் பொருட்டு இரு அமைச்சர்களையும் அதற்காக உடன்படவைக்கவுமே ஒரு மாத காலம் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற உபாயத்தைக் கையாண்டேன்.

தாங்கள், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். தாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரு அமைச்சர்களும் சுயாதீன சட்ட விசாரணையைத் தடை செய்யும் விதமாக நடந்துகொள்ளக்கூடாதென்று நீங்கள் அவர்களுக்கு அறிவுரை நல்க முன்வந்துள்ளீர்கள்.

மேலும், இரு அமைச்சர்களும் நீதிக்கு பங்கம் ஏற்படாத விதத்தில் விசாரணையை நடத்த எல்லா உதவிகளை வழங்க உள்ளீடல்களில் ஈடுபடாதிருக்கவும் வேண்டி, இரு சமயத்தலைவர்களும் கோரியுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ தர்மலிக்கம் சித்தார்த்தன், ​ கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சகல தமிழ் மக்களின் நலன்சார்ந்து இரு கௌரவ அமைச்சர்களுடனும் பேச உடன்பட்டுள்ளார்கள். அவர்களுடன் பேசி சட்டத்தின் செல்திசையை மாற்றவோ, சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்கைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்.

நல்லை ஆதீனம், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கடிதம்

இதேவேளை, நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருள் திரு வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா, வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நேற்று (19) கடிதம் அனுப்பியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மதத் தலைவர்களாகிய நாங்கள், அண்மைக்காலமாக வடமாகாணசபை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக எமது மக்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக இவ்விடயத்தை பொறுப்புள்ளவர்களுடன் கலந்துரையாடி ஓர் உகந்த தீர்வை மக்களின் நன்மை கருதி ஏற்படுத்த வேண்டிய அவசியத்தின் பிரகாரம் பின்வரும் ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கலாம் என கருதுகிறோம்.

1. விசாரணையின் போது குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் மீண்டும் தமது அமைச்சர் பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம். அத்துடன் அவர்கள் சம்மந்தமான குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளை இடையூறுகள் இன்றிச் செய்வதை அவ் அமைச்சர்கள் ஒத்துழைப்பதுடன் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல உறுப்பினர்களும் கட்சித் தலைமைகளும் விசாரணைகளை சரியான முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலமே நல்லாட்சியை வடமாகாணசபையில் கொண்டுவர முடியும்.

2 வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக கொண்ட மாகாணசபையை திறம்பட இயங்கச் சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்.

3. ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை மீளபெற்று கொள்ளப்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டுகிறோம். தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தபட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“‘விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்’” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு விவகாரத்தால் வவுனியாவில் கைகலப்பு

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, மோதல் சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களால், வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாக, வவுனியா மாவட்ட செயலகத்துக்கு, முன்பாக நேற்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வடமாகாண சுகாதார அமைச்சர், ஊழல் அற்றவர் எனவும் அவருக்கு சுகாதார அமைச்சு பதவியை தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும், முதலமைச்சர் நீதியாகச் செயற்பட வேண்டும் எனவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். அத்துடன், பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதுமட்டுமன்றி, வடமாகாண சுகாதார அமைச்சரின் புகைப்படத்தையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட் வேளையில், அங்கு வந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும், இளைஞர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவிட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில், வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறிவிட்டது.    ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் ஏற்பட்ட, பதற்றமான நிலைமையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், அங்கு விரைந்தனர். அதன் பின்னரே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, அவ்விடத்திலேயே, வீதியின் ஒரு பகுதியில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களும், மறுபக்கம் முதலமைச்சரின் ஆதரவானவர்களும் நின்றிருந்தனர். இருப்பினும் பொலிஸார் இரு பகுதியினருடனும் பேசி அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் சென்றுவிட்டனர்.

அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

‘யார் குற்றவாளிகள்?’

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பயங்கரமான நிலைமைக்கு யார் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்க வேண்டியது மக்களின் கடமையாகுமென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், அன்றைய தமிழ் அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ஆகியோரின் ஒரே ஆசை, சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒரே குடையின் கீழ் ஒரே கொள்கையுடன், ஒரே பொதுச் சின்னமாகிய உதய சூரியன் சின்னத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்பதாகும்.

(“‘யார் குற்றவாளிகள்?’” தொடர்ந்து வாசிக்க…)