சரி, விஜயதாச, ப. டெனிஸ்வரன் போய்விட்டார்; ஊழல் போய்விடுமா?

கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். வடக்கில், வட மாகாண போக்குவரத்து அமைச்சராகவிருந்த ப. டெனிஸ்வரன் அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

(“சரி, விஜயதாச, ப. டெனிஸ்வரன் போய்விட்டார்; ஊழல் போய்விடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு பொறுக்கியெடுத்துள்ளனர்.

(“புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன” தொடர்ந்து வாசிக்க…)

’ஆளுநரும் அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லை’

எமது நியாயமான போராட்டம் தொடங்கி மூன்று மாதங்கள் நெருங்குகின்றபோதும் உயர் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட எவரும் கவனத்தில் எடுக்காததால் நாம் இந்தப் பாதயாத்திரைப் பேரணியை எமது போராட்டத்தின் ஒரு வடிவமாக ஆரம்பித்துள்ளதாக, செவ்வாய்க்கிழமை மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக தலைமை வளாகத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரைப் பேரணி, ஏறாவூர் நகர சபை வரை சென்று பிர்சாரத்துடன் முடிவுற்றது.

(“’ஆளுநரும் அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற நிலையிலேயே, இந்த நிலைப்பாட்டை, அவ்வொன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. பிரெக்சிற் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில், நேற்று முன்தினம் ஆரம்பமாகின. அதன்போதே, இந்த நிலைப்பாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கல் பார்னியர் வெளிப்படுத்தினார்.

(“பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)

‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநாச்சி – பரவிப்பாஞசான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

(“‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’” தொடர்ந்து வாசிக்க…)

வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?

(எஸ்.கருணாகரன்)

மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவுக்கு மீண்டும் பதவி: எதிர்ப்பைச் சமர்ப்பிக்க அவகாசம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்பை சமர்ப்பிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகளை, செப்டெம்பர் 4ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க, நேற்று (29) உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை, ஓஸ்கட் 29ஆம் திகதி (நேற்று) சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக் கால அவகாசம் வேண்டுமென இரு தரப்பினரும் கோரியதையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்ப்டடது.

(“மஹிந்தவுக்கு மீண்டும் பதவி: எதிர்ப்பைச் சமர்ப்பிக்க அவகாசம்” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

(சாகரன்)

மண்டை தீவுக்கடலில் மூழ்கி மரணித்த அந்த இளைஞர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலிகள். மிகுந்த வருத்தம் நிறைந்த நிகழ்வு சிறப்பாக அவர்தம் பெற்றோரின் கவலையை நீக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. தவிர்த்திருக்கக் கூடிய இழப்புக்கள். நீரில் மூழ்காதிருக்கும் பாதுகாப்பு கவசங்களை இவர்கள் அணித்திருக்கவில்லை என்பதுவும் எவ்வாறு இந்த களியாட்ட விபத்து நிகழ்ந்திருக்கின்றது என்பதுவும் இங்கு கேள்விகளாகவும் கண்டனங்களாகவும் எம் முன் இருக்கின்றன. உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் சென்றவர்களிடம் நீச்சல் ‘நன்கு’ தெரிந்தவர் இல்லையா என்ற கேள்விகளும் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. நடக்க தெரிந்த மனிதன் மற்றய உயிரினங்கள் போல் பழகாமலே நீந்தும் இயல்பைக் கொண்டிருப்பதில்லை என்பதினால் நீச்சல் என்பது இங்கு மனிதர்களுக்கு அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகின்றது.

(“மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.” தொடர்ந்து வாசிக்க…)

பட்டும் திருந்தவில்லை

1952 இல் சேர்.யோன்.கொத்தலாவல பிரதமராகிய பின் யாழ்ப்பாணம் வந்தார்.இவருக்கு யாழ் ம்த்திய கல்லூரி மைதானத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பில் அமிர்தலிங்கம் தலைமையில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மூலம் அமிர்தலிங்கம் பிரபலமானார்.இருந்தாலும் இந்த வரவேற்பை கொத்தலாவல பொருட்படுத்தவில்லை. அதன் பின் தீவுப்பகுதியில் கொழும்பு தமிழ் வர்த்தகர்களால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பைக் கண்டு மகிழந்த கொத்தலாவல உணர்ச்சிவசப்பட்டு தமிழுக்கு ஒரு சிறந்த இடத்தை வழங்க ஏற்பாடுசெய்வதாக கூறினார்.இந்த உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தை இலங்கையில் அரசியலையும் அரசியற்போக்கையும் சின்னாபின்னமாக்கியது.

(“பட்டும் திருந்தவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?

அண்மையில் தாயகம் சென்று திரும்பிய இருவர் பேரூந்தில் எனது முன் ஆசனத்தில் இருந்து பேசிய விடயம் என் காதுவரை கேட்டது. கன காலத்துக்கு பின் இப்போதுதான் சொந்த மண்ணுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது பற்றி ஒரு நிமிடம் மட்டும் பேசியவர்கள் ஓவியா பக்கம் பாதை மாறினார்கள். அந்த பிள்ளை போனபின் பிக்பொஸ் சூடு தணிஞ்சு போச்சு என்றார் ஒருவர். மற்றவரோ எண்டாலும் சுஜா அவரை ஈடு செய்வார் என்றார். பதினைந்து நிமிட பயணத்தில் பதின்நான்கு நிமிடங்களும் பிக்பொஸ் பற்றிய பேச்சுத்தான் தொடர்ந்தது. தாயக பயணம் பற்றிய பேச்சை பாதை மாற்றியது பிக்பொஸ்.

(“பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?” தொடர்ந்து வாசிக்க…)