ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாகவே, அவர்கள் மயக்கமுற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். ஹற்றன், நோர்வூட் நகரத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உள்ள ஊழியர்கள் பலர், இன்று (04) காலை மயக்கமுற்று விழுந்துள்ளனர். இவர்களில் சுமார் 100 பேர் வரையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியா தொடர்பில் ஐ.அமெரிக்காவுடன் ரஷ்யா முறுகல்

“சிரியாவிலுள்ள ரஷ்யத் துருப்புகள் மீது, ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன” என, ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஐ.அமெரிக்காவின் விசேட படைகளுக்கும் ஐ.அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் ஆயுததாரிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நேசமான உறவுகள் காணப்படுகின்றன” எனக் குற்றஞ்சாட்டிய அவர், “சிரிய இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தணிக்க, ஐ.அமெரிக்கா முயல்கிறது” எனவும் குற்றஞ்சாட்டினார். (“சிரியா தொடர்பில் ஐ.அமெரிக்காவுடன் ரஷ்யா முறுகல்” தொடர்ந்து வாசிக்க…)

உயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

 

வேதியியலுக்குக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கபப்ட்டுள்ளது. உயிர் வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. (“உயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

புகலிடம் கோரும் 1,333 பேர் நாட்டில் உள்ளனர்

“அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி வருகைத்தந்த 1,333 பேர், ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பின் கீழ் இலங்கையில் உள்ளனர்” என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். “கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரையிலும் புகலிடம் கோரியோரின் எண்ணிக்கையே இதுவாகும்” என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“புகலிடம் கோரும் 1,333 பேர் நாட்டில் உள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள, மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுமார் 150 கைதிகள், நேற்று (15) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார். போகம்பர சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகள், கடந்த வியாழக்கிழமை (14) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆரம்பித்த பின்னரே, இந்த​ வெலிக்கடையிலும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுத​லை செய்யுமாறு ​கோரியே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியில் 104 நாட்களாக நடந்துவந்த முழு அடைப்புப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையையும், பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் ஏற்று இந்தப் போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குருங்குக்கு முக்கியத்துவம் தந்து ராஜ்நாத் சிங் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதாரமும் முற்றிலும் முடங்கிப்போயிருக்கும் சூழலில், நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் இறங்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

(“முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் இலங்கை அகதிகளும்,நாடுதிரும்புதலும் பாகம்-2

(தோழர்ஸ்ரனிஸ்)
தமிழகத்தில் முகாம்களில் உள்ள அகதிகளுக்கு தமிழக அரசின் நியாயவிலைகக்டை மூலம் அரிசி, மண்ணெண்ணை, சீனி, பருப்பு, பாமாயில் என்பன வழங்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. மாதக் கொடுப்பனவாக ஒரு குடுப்பத்தின் தலைவருக்கு ரூ.1000,12வயதுக்கு மேல் ரூ.750,12வயதுக்குக் கீழ் ரூ.450 வழங்கப்படுவதுடன் அரிசி மாதமொன்றுக்கு 08 வயதுக்கு மேல் 12கிலோ,08வயதுக்கு கீழ் 6கிலோ.2கிலோ அரிசி 55 சதத்திற்கே வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஒரு குடுப்ப அட்டைக்கு 3லிட்டர்,சீனி 2கிலோ என்பனவும் வழங்கப்படுகிறது.

(“தமிழகத்தில் இலங்கை அகதிகளும்,நாடுதிரும்புதலும் பாகம்-2” தொடர்ந்து வாசிக்க…)

நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?

(காரை துர்க்கா)
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர், என்பதையே நடப்பு நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன.  இனப்பிரச்சினைக்குப் பல்வேறு காலங்களிலும் பல தரப்பாலும் பல தீர்வுத் திட்டங்கள் முன் மொழியப்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதே நாம் அனைவரும் கடந்து வந்த கசப்பான வரலாறு ஆகும்.

(“நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?” தொடர்ந்து வாசிக்க…)

லாஸ் வெகாஸில் பயங்கரம்; 50 பேர் பலி; 200 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வெகாஸ் நகரில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது 50 பேர் பலியானதோடு, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னர், குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

(“லாஸ் வெகாஸில் பயங்கரம்; 50 பேர் பலி; 200 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் பூர்வகுடிகள் 

(விஜய்)

இலங்கைப் பௌத்த சிங்களவரினதும் இலங்கைத் தமிழரினதும்; புராதன வரலாற்றைக் கூறும் நூல்களில், இலங்கையின் பூர்வ குடிகள் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துக்களை தொகுத்து முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

(“இலங்கையின் பூர்வகுடிகள் ” தொடர்ந்து வாசிக்க…)