குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள்

(எஸ்.கருணாகரன்)

நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்….” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர்.

(“குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பலஸ்தீனிய போராட்டம்: ஹமாஸ் – ஃபட்டா

ஹமாஸ் (Hamas) மற்றும் ஃபட்டா (Fatah) ஆகிய இரண்டு பலஸ்தீனிய பிரிவுகளுக்கு இடையிலான, ஒரு தசாப்தகால யுத்தத்தையும் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய பணிகளில் ஒன்றாக, இருபிரிவினரும் கெய்ரோவில் சமரச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஸா (Gaza) நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை ஃபட்டா ஆயுதக்குழுவின் ஆதரவுடன் ஹமாஸ் இயக்கம், தொடர்ச்சியாகப் பேணலாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எகிப்தின் இராஜதந்திரிகளே, கெய்ரோவில் குறித்த இந்த இணக்கப்பாடு ஏற்பட, தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(“பலஸ்தீனிய போராட்டம்: ஹமாஸ் – ஃபட்டா” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மேல்கொத்மலை மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (15) திறந்துவிடப்பட்டுள்ளன. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், கெனியன் நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் நோட்டன், விமல சுரேந்திர, மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்

(கே. சஞ்சயன்)

அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன.

(“பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

தடையை மீறி போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ள நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவையும் மீறி, போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வெளிநாட்டு பிரஜையின் அங்கத்துவம் தொடர்பில் கவனம்

எந்தவொரு அரசியல் கட்சியிலும், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை உரிமையாக் கொண்டவர்கள் அலுவலகக் கடமைகளில் ஈடுபடக்கூடாது என்பது தொடர்பில், கவனம் செலுத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம், நேற்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்டவரும், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும் தேசிய ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான ஷலில மூனசிங்க, நிதி மோடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

(“வெளிநாட்டு பிரஜையின் அங்கத்துவம் தொடர்பில் கவனம்” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் எம்.பி சூசைதாசன் காலமானார்

மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.எஸ். சூசைதாசன் சோசை, தனது 83ஆவது வயதில் நேற்று (13) மாலை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டம் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ். சூசைதாசன் சோசை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியில் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

‘அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்’

“அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழி தின விழா, யாழ். இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.

(“‘அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்’” தொடர்ந்து வாசிக்க…)

நெஞ்சம் மறப்பதில்லை……….

எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் ஆரம்பம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிமேலும் கிடைக்க முடியாத தன்னலமற்ற உறவுகளை தந்த காலம். ஒன்றிரண்டு வயசு மட்டுமே வித்தியாசமான அதற்கு முன்பு எந்தவித அறிமுகமும் இல்லாத இளையவர் நாம் ஒன்றாக அணிதிரண்ட காலம். இனம் பற்றிய சிந்தனை மட்டுமே எம் மனதில் இருந்த நாம் வரித்துக்கொண்ட இலட்சியம்.

(“நெஞ்சம் மறப்பதில்லை……….” தொடர்ந்து வாசிக்க…)