கலவரமாகுமா உள்ளூராட்சி தேர்தல் களம்?

உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பெறப்படும் முன்பே அரசியல் புகைக்கத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து செயல்ப்படவோ அன்றி அதன் வீட்டு சின்னத்தில் போட்டியிடவோ போவதில்லை என ஈ பி ஆர் எல் எப் கட்சி பிரேமசந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

(“கலவரமாகுமா உள்ளூராட்சி தேர்தல் களம்?” தொடர்ந்து வாசிக்க…)

2009ம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியது

2004 இல் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் விடுதலைப்புலிகளின் பூரண செயலிழப்புடன் 2009 ல் மே மாதம் வரை ஐந்து ஆண்டுகள் எவ்வாறு நீடித்தது? யுத்தத்தின் விளைவால் பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டார்கள் என்பது இரகசியமல்ல. யுத்தம் முடிந்தவுடன் ஒர் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தால், தேசத்துரோகம் உட்பட பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகவேண்டியவர்கள் தாம் பெரும் வீரர்கள் என எடுத்துக்காட்ட மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

(“2009ம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியது” தொடர்ந்து வாசிக்க…)

அதாவுல்லாவுக்கு பல முனைகளிலும்               பலம் சேர்த்த பாலமுனை பிரகடன மாநாடு!

 

(விருட்சமுனி)

தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லாவின் அரசியல் மீள் எழுச்சியில் கடந்த வாரம் நடந்து முடிந்த பாலமுனை பிரகடன மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல் ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக எம். எச். எம். அஷ்ரப் பதவி வகித்தபோது அவருடன் சேர்ந்து பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்து கொடுத்ததில் அதாவுல்லாவின் பங்கும், பங்களிப்பும் நேரடியானதாக அமைந்து இருந்தது.

(“அதாவுல்லாவுக்கு பல முனைகளிலும்               பலம் சேர்த்த பாலமுனை பிரகடன மாநாடு!” தொடர்ந்து வாசிக்க…)

2009 யுத்தத்திற்கு முன்பு 30 வருடம் கோமாவில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறிதரன்

தமிழ்மக்கள் தனிநாடு கோரி எப்போதும் போராடவில்லை! பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறிதரன் தற்போது இலங்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டிருக்கும் உத்தேச அரசியல்அமைப்பு சீர்திருத்தம் மீதான விவாதத்தின் போது 20 ஆவது அரசியல்அமைப்பை வரவேற்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றும்போதே இதனைக்குறிப்பிட்டார் தொடர்ந்து உரையாற்றும்போது தனது உரையில் 20 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பௌத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த சிவஞானம்.சிறிதரன் இன்றைய உரையில் 20 ஆவது திருத்தம் அவசியம் என்பதை ஆங்காங்கே சுட்டிக்காட்டினார்.

(“2009 யுத்தத்திற்கு முன்பு 30 வருடம் கோமாவில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறிதரன்” தொடர்ந்து வாசிக்க…)

நெஞ்சம் நெகிழ வைத்தது .. நேற்று நான் பார்த்த ஒரு புகைப்படம் !

இதோ ..இந்தப் படத்தின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண் …
தன்னைத் தூக்கி வளர்த்த , தன் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த ,
அள்ளி அரவணைத்து வளர்த்த … தன் அப்பாவின் கைகளைத்தான் நேருக்கு நேர் பார்க்கிறாள் .
கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன ..
ஆனால் அவள் அப்பா , எப்போதோ கர்த்தரிடத்தில் போய் சேர்ந்து விட்டார் !

(“நெஞ்சம் நெகிழ வைத்தது .. நேற்று நான் பார்த்த ஒரு புகைப்படம் !” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

ரி. தர்மேந்திரன் –

கிழக்கு தேசம் என்கிற கோட்பாட்டின் ஸ்தாபகரான வஃபா பாருக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளர் ஆவர். தமிழீழ தாயகம் போல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல, ஒரு நாடு இரு தேசம் போல வஃபா பாருக் கிழக்கு தேசம் என்கிற சிந்தனை கருவை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக முன்னெடுத்து வருகின்றார். முஸ்லிம்களின் சம கால அரசியல் குறித்து நாம் இவரை பேட்டி கண்டபோது….

(“கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய காங்கிரஸ் வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்!

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா அடுத்ததாக வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று இக்கட்சியின் மகளிர் அணி தலைவியும், வட மாகாண பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் கோரி உள்ளார். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலமுனை பிரகடன மாநாட்டை நடத்தி 05 தீர்மானங்களை நிறைவேற்றியது. இதில் வட மாகாணத்தில் இருந்து வந்து ஜான்சிராணி சலீம் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“தேசிய காங்கிரஸ் வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.கவை கைவிட்டது சு.க

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடபோவதில்யென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டது. இதன்கீழ், கடந்த 10 வருடத்துக்கும் மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த இப்படைமுகாம் அகற்றப்பட்டு, அந்த காணிகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்

(தோழர் சுகு)

யார் சொன்னது அக்டோபர் புரட்சியின் அறங்கள் தோற்றதென்று ! அது காட்டாற்று வெள்ளம்!!;

நாம் வாழும் காலத்து பதிய தலைமுறைக்கு அகடோபர் புரட்சி பற்றிய அறிவு பிரக்ஞை இல்லை என்றே கூறிவிடலாம்.

1990 பெரும் பிரளயம் போல் உருவான நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் தாராளவாத பொருளாதாரமுறையில் அடிபட்டுச் செல்லும் தலைமுறை இது.

பொதுவாகவே சுதந்திரப்போராட்டம் ,சமூகமாற்றம் பற்றிய கருத்துக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நகர்ப்புற இளைஞர் குழாம் ஒன்று உருவாகியுள்ளது.

(“அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்” தொடர்ந்து வாசிக்க…)